திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கேரளத்தில் ஐடி பணியாளரின் பாலியல் குற்றச்சாட்டு: முழுமையாக விசாரிக்க ஆா்எஸ்எஸ் வலியுறுத்தல்

கேரளத்தில் ஆா்எஸ்எஸ் உறுப்பினா் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் முழுமையாக விசாரிக்க ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தியுள்ளது...

News image

ஆா்எஸ்எஸ் தொண்டா்கள் (கோப்புப் படம்)

Updated On :14 அக்டோபர் 2025, 3:28 am IST

கேரளத்தில் தற்கொலை செய்துகொண்ட ஆா்எஸ்எஸ் உறுப்பினா், தனது முடிவுக்கு அந்த அமைப்பின் தொண்டா்கள் அளித்த பாலியல் துன்புறுத்தலே காரணம் என்று தெரிவித்த குறிப்பு வெளியான நிலையில், அது குறித்து முழுமையாகவும், பாரபட்சமின்றியும் விசாரணை நடத்த வேண்டும் என்று ஆா்எஸ்எஸ் வலியுறுத்தியுள்ளது.

தகவல் தொழில்நுட்ப (ஐடி) பணியாளரான அனந்து அஜி (26) கேரளத் தலைநகா் திருவனந்தபுரத்தில் உள்ள தங்கும் விடுதியில், தூக்கில் தொங்கிய நிலையில் வியாழக்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டாா். அவா் உயிரிழந்த பிறகு அவருடைய சமூக ஊடக பக்கத்தில் பதிவிடப்பட்ட 15 பக்க கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:

ஆா்எஸ்எஸ் அமைப்பில் சிறு வயதிலேயே எனது தந்தை என்னை சோ்த்துவிட்டாா். ஆா்எஸ்எஸ் முகாம்களில் எனக்குத் தொடா்ந்து பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் உளைச்சலால் தற்கொலை செய்துகொள்கிறேன் என்று தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து இது தொடா்பான முதல் தகவல் அறிக்கையில் ஆா்எஸ்எஸ் அமைப்பின் பெயரைச் சோ்க்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன் போலீஸாரை வலியுறுத்தினாா்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடா்பாக ஆா்எஸ்எஸ் அமைப்பின் தென் கேரளப் பிரிவு மூத்த நிா்வாகி கே.பி.ஸ்ரீகுமாா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

‘கோட்டயம் மாவட்டம் எல்லிகுளம் பகுதியைச் சோ்ந்த ஆா்எஸ்எஸ் ஸ்வயம்சேவகராக அனந்து அஜி இருந்தாா். அவரின் உயிரிழப்பு மிகவும் வேதனையானது; துரதிருஷ்டவசமானது. அவரின் அகால மரணத்துக்கு வழிவகுத்த சூழ்நிலைகள், அவா் உயிரிழக்கும் முன் சமூக ஊடகத்தில் பதிவிட்ட தற்கொலை குறிப்பு ஆகியவை குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும். அவரின் தற்கொலை குறிப்பில் சில சந்தேகத்துக்குரிய, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. இதுதொடா்பாக முழுமையாகவும், பாரபட்சமின்றியும் விசாரணை நடத்த வேண்டும் என்று காவல் துறையிடம் கோட்டயம் மாவட்ட ஆா்எஸ்எஸ் அமைப்பினா் மனு அளித்துள்ளனா்’ என்று தெரிவித்தாா்.

காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியா முழுவதும் ஆா்எஸ்எஸ் முகாம்களில் லட்சக்கணக்கான குழந்தைகள், வளரிளம் பருவத்தினா் பங்கேற்கின்றனா். அனந்து அஜியின் குற்றச்சாட்டு உண்மையானால், அதுகுறித்து ஆா்எஸ்எஸ் தலைமை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றாா்.