இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆபரேஷன் சிந்தூர்: ஒரே நாளில் பங்குச் சந்தை மீது 40 கோடி சைபர் தாக்குதல்கள்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, ஒரே நாளில் பங்குச் சந்தை மீது 40 கோடி சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தகவல்.

News image
ஆபரேஷன் சிந்தூர்
Updated On :14 அக்டோபர் 2025, 6:50 am

இணையதளச் செய்திப் பிரிவு

தேசிய பங்குச் சந்தை மீது நாள் ஒன்றுக்கு 17 கோடி சைபர் தாக்குதல்கள் நடப்பதாகவும், அவற்றிலிருந்து பாதுகாக்கும் பணியில், சைபர் போர் வீரர்கள் கொண்ட குழு 24 மணி நேரமும் பணியாற்றி வருவதாக மூத்த அதிகாரி கூறியுள்ளார்.

அதேவேளையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, தேசிய பங்குச் சந்தை மீது ஒரே நாளில் 40 கோடி சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆனால், அனைத்தையும், நமது சைபர் பாதுகாப்பு வீரர்கள் கொண்ட குழு மிக நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு தகர்த்தெறிந்தனர் என்றும், இவர்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும், தேசிய பங்குச் சந்தைகளைக் குறி வைத்து சைபர் மோசடியாளர்கள் தொடர்ந்து சைபர் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். ஆனால், நமது தொழில்நுட்பக் குழுவானது, அதிநவீன தொழில்நுட்படங்களைக் கொண்டும், மேம்படுத்தப்பட்ட மென்பொருள் கொண்டு, 24 மணி நேரமும், சைபர் தாக்குதல்களிலிருந்து தேசிய பங்குச் சந்தையை காப்பாற்றி வருகிறார்கள் என்று தேசிய பங்குச் சந்தை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

நாள்தோறும், 15 முதல் 17 கோடி சைபர் தாக்குதல்கள் நடப்பதாகவும், இது நமது தொழில்நுட்பக் குழுவுக்கு மிகப்பெரிய சவாலான பணியாக அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தேசிய பங்குச் சந்தைக்கு என இரண்டு சைபர் பாதுகாப்பு மையங்கள் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடும். மிகப்பெரிய அளவில் நடத்தப்படும் தாக்குதல்களையும் ஆண்டு முழுவதும் 24/7 என்ற நிலையில் பாதுகாத்து வருகிறார்கள். இயந்திரங்கள், தொழில்நுட்பம் மற்றும் இயந்திரத்துடன் இணைந்து பணியாற்றும் நபர்கள் என பலக் குழுவைக் கொண்டது.

தேசிய பங்குச் சந்தை நடவடிக்கைகளை முடக்கி, அதில் பயனர்கள் யாரும் முதலீடுகளை செய்ய முடியாத அளவில் முடக்குவதும், அந்த விவரங்களை திருடுவது போன்றவற்றில் ஈடுபட, வைரஸ்களை அனுப்புவது, ஜிபிஎஸ் கருவியை ஏமாற்றுவது, இணையதளத்தை முடக்குவதற்கான வேலைகளில் ஈடுபடுவது போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள்.

இந்த தேசியப் பங்குச் சந்தைக்கு மட்டுமல்ல, இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் பல்வேறு அமைப்புகளுக்கும் இந்த பிரச்னை உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

A senior official has said that the National Stock Exchange is facing 17 crore cyber attacks per day and a team of cyber warriors is working round the clock to protect it from them.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.