திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

விழிப்புணர்வு ஏற்படுத்திய வங்கி மேலாளரே மோசடியில் சிக்கினார்! ரூ. 13 லட்சம் இழப்பு!!

மோசடிக்கு ஆளான எஸ்பிஐ வங்கி துணை மேலாளர் பற்றி..

News image
கோப்புப்படம்- ANI
Updated On :15 அக்டோபர் 2025, 8:12 am

இணையதளச் செய்திப் பிரிவு

சைபர் பாதுகாப்பு குறித்து வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய வங்கி மேலாளரே மோசடிக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பங்குச் சந்தை முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் என முதலீடுகளில் அதிக லாபம் என்று கூறிதான் தற்போது அதிகளவில் மோசடிகள் நடைபெற்று வருகின்றன. முதலீடுகள் என்பதால் இதன் மதிப்பும் அதிகமாகவே இருக்கிறது.

சைபர் பாதுகாப்பு குறித்து சைபர் குற்றப்பிரிவு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. வங்கிகளும் இதுபற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் இந்திய ஸ்டேட் வங்கியின் துணை மேலாளர் ஒருவர், பங்குச்சந்தை முதலீட்டு மோசடியில் ரூ. 13 லட்சத்தை இழந்துள்ளார்.

தில்லியைச் சேர்ந்த தேஜ் பிரகாஷ் சர்மா என்பவர் சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கிளையில் துணை மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.

சர்மாவுக்கு தெரியாத எண்ணில் இருந்து ஒரு வாட்ஸ்ஆப் அழைப்பு வந்துள்ளது. உரிமம் பெற்ற ஒரு நிதி நிறுவனத்தில் இருந்து திவ்யன்ஷி அகர்வால் என்பவர் பேசி தங்களது நிறுவனம் ஆர்பிஐ, செபி ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நம்ப வைத்து முதலீடு செய்ய வைத்துள்ளார். ஒரு சில வாரங்களில் அதிக லாபம் கிடைக்கும் 'சிறப்பு திட்டம்' என்றும் உறுதியளித்துள்ளார்.

இதை நம்பிய சர்மா, தனது மொத்த சேமிப்பு என 6 வங்கிக்கணக்குகளுக்கு ரூ. 13 லட்சம் அனுப்பியுள்ளார். சில நாள்களில் அந்த சிறப்புத் திட்டத்தில் இணைந்ததாக அவருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அடுத்த சில வாரங்களில் அந்த நிறுவனத்தில் இருந்து எந்த தொடர்பும் இல்லாமல் போய்விட்டது.

அதன்பின்னர் அவர் புகார் அளித்த நிலையில் அவர் அனுப்பிய வங்கிக்கணக்குகள் உடனடியாக முடக்கப்ட்டுள்ளன. அவரைத் தொடர்புகொண்ட எண்களும் 'எச்சரிக்கை எண்களில்' செய்யப்பட்டுள்ளன.

சர்மா அவர் வேலை செய்யும் வங்கியில் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வுகளில் பங்கேற்று வாடிக்கையாளர்களுக்கும் இதுகுறித்து அறிவுறுத்தி வந்துள்ளார். ஆனால், அவரையே நம்ப வைத்து மோசடி கும்பல் பணத்தை ஏமாற்றியுள்ளது.

உங்களுடன் போனில் பேசுபவர்கள் தேவையான ஆவணங்களை அனுப்பி நீங்கள் நம்பும்படி பேசினாலும் உடனடியாக அதை நம்பி முதலீடு செய்யாமல் நன்கு அறிந்த ஒரு நிதி ஆலோசகரை தொடர்புகொண்டு விசாரித்த பின்னர் முடிவெடுப்பது நல்லது.

summary

Cyber Criminals Dupe SBI Deputy Manager Of Lakhs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.