ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தனியார் பேருந்தில் தீப்பற்றியதில் 20 பேர் பலி! பிரதமர், குடியரசுத் தலைவர் இரங்கல்!

ராஜஸ்தானில் பேருந்தில் தீப்பற்றிய விபத்தில் பலியான 20 பேருக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் இரங்கல்

News image
தீப்பற்றிய பேருந்து- PTI
Updated On :15 அக்டோபர் 2025, 6:58 am

இணையதளச் செய்திப் பிரிவு

ராஜஸ்தானில் பேருந்தில் தீப்பற்றிய விபத்தில் பலியான 20 பேருக்கு பிரதமர், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் இரங்கல் தெரிவித்தனர்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மாரில் இருந்து ஜோத்பூருக்கு 57 பயணியருடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, திடீரென தீப்பற்றி எரிந்ததில், அதில் பயணித்த 20 பேர் உடல் கருகி பலியாகினர்; மேலும், 16-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Story image

இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்ததுடன், அவர்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரண உதவியும், காயமடைந்தோருக்கு ரூ. 50,000-யும் அறிவித்தார்.

மேலும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனும் இரங்கல் தெரிவித்தனர்.

தீப்பற்றிய பேருந்து, 5 நாள்கள் முன்னதாக புதிதாக வாங்கிய பேருந்து என்றும் கூறப்படுகிறது.

summary

20 people dead after fire breaks out in Rajasthan bus, 16 more injured

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.