பிரதமர் நரேந்திர மோடியை, எகிப்து அரசின் வெளியுறவு அமைச்சர் பத்ர் அப்தலட்டி இன்று (அக். 17) நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
எகிப்து வெளியுறவு அமைச்சர் பத்ர் அப்தலட்டி, 2 நாள்கள் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். இந்தப் பயணத்தின் இறுதி நாளான இன்று அவர் தில்லியில், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பில், காஸா அமைதி ஒப்பந்தத்தில் முக்கிய பங்காற்றிய எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டாஹ் எல்-சிஸிக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.
இதுபற்றி, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “காஸா அமைதி ஒப்பந்தம் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய எகிப்து அதிபர் சிஸிக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, எகிப்து வெளியுறவு அமைச்சராகப் பதவியேற்ற பின் முதல்முறை இந்தியா வந்துள்ள அப்தலட்டி, கடந்த அக்.16 ஆம் தேதி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்து உரையாடியது குறிப்பிடத்தக்கது.
Summary
Egyptian Foreign Minister Badr Abdellatti met Prime Minister Narendra Modi in person today (Oct. 17).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு! பாக். பிரதமருடன் ஈரானிய பிரதிநிதிகள் சந்திப்பு!

ராகுலுடன் சேர்ந்து கார்கேயின் மேன்மை கெடுகிறது : அமித் ஷா

பிரதமர் மோடியை மாரீசனுடன் ஒப்பிடுவதா?: தெலங்கானா முதல்வருக்கு பாஜக கண்டனம்!
பாஜகவில் இணைந்த லியாண்டா் பயஸ் பிரதமர் மோடியுடன் சந்திப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


