பாடகர் ஸுபீன் கர்க்கின் மரணம் தொடர்பான வழக்கில் சந்தேகப்படும் வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை என்று சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளனர்.
அஸ்ஸாமை சேர்ந்த பாடகர் ஸுபீன் கர்க், கடந்த மாதம் சிங்கப்பூரில் கடலில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தபோது உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவரது மரணம் தொடர்பான வழக்கில் இதுவரையில் சந்தேகப்படும்படியாக எதுவும் கண்டறியப்படவில்லை என்று சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. ஸுபீன் கர்க் மரணம் தொடர்பாக தவறான தகவல்கள் பரவி வருவதாகக் கூறிய காவல்துறையினர், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
அஸ்ஸாமை சேர்ந்த பாடகர் ஸுபின் கர்க் கடந்த மாதம் சிங்கப்பூருக்குச் சென்றிருந்தார். அங்குள்ள கடலில் நீச்சல் அடித்துக்கொண்டிருந்தபோது அவர் உயிரிழந்ததார். ஆனால் அவரது மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஸுபின் கர்க் மரண வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது. முதல்கட்டமாக வடகிழக்கு இந்திய திருவிழா ஏற்பாட்டாளர் ஷியாம்கனு மஹந்தா, ஸுபின் கர்கின் மேலாளர் சித்தார்த் ஷர்மா ஆகிய இருவரும் அக்.1-ஆம் தேதி கைதுசெய்யப்பட்டனர்.
சிங்கப்பூருக்கு ஸுபின் கர்கை அழைத்துச்சென்ற காவல்துறை அதிகாரியும் அவரது உறவினருமான சந்தீபன் கர்க் அக்.8-ஆம் தேதியும், ஸுபின் கர்கின் பாதுகாவலர்கள் நந்தேஷ்வர் போரா மற்றும் பரீஷ் பைசியா ஆகியோர் அக்.10-ஆம் தேதியும் கைதுசெய்யப்பட்டனர்.
இதையும் படிக்க: கல்லூரி கழிப்பறையில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை! மாணவர் கைது!
Summary
'No Foul Play Suspected': Singapore Police As Probe Into Zubeen Garg's Death Continues
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இளையான்குடி அருகே தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

இளைஞா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை
தில்லியில் தேடப்படும் குற்றவாளி கைது: மீண்டும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டபோது பிடிபட்டாா்!

தில்லி ஹோட்டல் தீ விபத்து: உரிமையாளரின் மேலாளரைத் தேடும் காவல்துறை
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



