செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

இந்தூரில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: சிறுவன் பலி, 5 பேர் காயம்!

இந்தூரில் மூன்று மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் 11 வயது சிறுவன் உயிரிழந்தான்.

News image

இந்தூரில் தீ விபத்து

Updated On :18 அக்டோபர் 2025, 3:41 pm IST

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் மூன்று மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் 11 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.

பலசரக்கு வியாபாரியின் மூன்று மாடிக் கட்டடத்தில் அதிகாலை 2.15 மணியளவில் மின்கசிவு ஏற்பட்டதன் காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டது. வீட்டின் முன்பகுதியில் பழைய பொருள்கள் சேமிக்கப்பட்டிருந்ததாகவும், குடும்பத்தினர் பின்புறத்திலும் வசிந்து வந்துள்ளனர்.

எளிதில் தீப்பரவும் பொருள்கள் இருந்ததால், தீ வேகமாகப் பரவி கட்டடம் முழுவதும் சூழ்ந்தது. அந்த வீட்டில் நுழைவுவாயிலைத் தவிர கரும்புகை வெளியேற வழியில்லா நிலையில், முதல் மாடிக் கட்டடத்தில் வசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் மூச்சுத் திணறல் காரணமாக மயக்கமடைந்தனர், இருப்பினும் தீக்காயங்கள் எதுவும் ஏற்படவில்லை,.

காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் அங்கிருந்தவர்களை வெளியே கொண்டு வந்து அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், அங்கு 11 வயது சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

மற்ற ஐந்து பேரில் ஒரு தம்பதியர், அவர்களது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் நான்கு பேர் உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

மீட்புப் பணியாளர்கள் இரண்டாவது மாடியில் வசித்த நான்கு பேர் கொண்ட மற்றொரு குடும்பத்தையும் மரத்தில் ஏறி மீட்டனர். சம்பவம் குறித்து விசாரிக்கப்படும் என்று போலீஸார் கூறினார்.

Summary

An 11-year-old boy died and five others were injured in a fire that broke out in a three-storey building in Indore, Madhya Pradesh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.