பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக முதல்கட்டமாக 25 வேட்பாளர்களை அசாதுதீன் ஓவைசியின் ஆல் இந்தியா மஜ்லீஸ் - இ - இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி அறிவித்துள்ளது.
பிகார் சட்டப்பேரவையில் 100 தொகுதிகளில் போட்டியிடுவோம் என இக்கட்சி கூறியிருந்த நிலையில், முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 2 தொகுதிகள் முஸ்லிம்கள் அல்லாத தொகுதிகளாகும்.
இது தொடர்பாக ஆல் இந்தியா மஜ்லீஸ் - இ - இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் 25 வேட்பாளர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கட்சியின் மாநில தலைவரும் எம்.எல்.ஏ.வுமான அக்தருல் இமாம் அமோர் தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
बिहार विधानसà¤à¤¾ à¤à¥à¤¨à¤¾à¤µ à¤à¥ AIMIM पà¥à¤°à¤¤à¥à¤¯à¤¾à¤¶à¤¿à¤¯à¥à¤ à¤à¥ नाम à¤à¥à¤ à¤à¤¸ तरह हà¥à¤à¥¤ à¤à¤à¤¶à¤¾à¤à¤²à¥à¤²à¤¾à¤¹ à¤à¤®à¥à¤®à¥à¤¦ हॠà¤à¤¿ हम बिहार à¤à¥ सबसॠमà¤à¤¼à¤²à¥à¤® लà¥à¤à¥à¤ à¤à¥ à¤à¤µà¤¾à¤à¤¼ बनà¥à¤à¤à¥à¥¤ यह सà¥à¤à¥ AIMIM बिहार यà¥à¤¨à¤¿à¤ नॠतà¥à¤¯à¤¾à¤° à¤à¥ हॠà¤à¤° à¤à¤¸ सिलसिलॠमà¥à¤ पारà¥à¤à¥ à¤à¥ à¤à¤¼à¥à¤®à¥ à¤à¤¿à¤¯à¤¾à¤¦à¤¤ सॠà¤à¥ मशविरा à¤à¤¿à¤¯à¤¾ à¤à¤¯à¤¾ हà¥à¥¤
— AIMIM (@aimim_national) October 19, 2025
We are happy to announce the list⦠pic.twitter.com/9ec1t4KpR2
மத்திய கயாவில் ரிசர்வ் தொகுதியான சிக்கந்ராவில் மனோஜ் குமார் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சியின் தற்போதைய எம்.எல்.ஏ. பிரஃபுல் குமார் மாஞ்சியுடன் அவர் போட்டியிடவுள்ளார்.
கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் 19 தொகுதிகளில் ஆல் இந்தியா மஜ்லீஸ் - இ - இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி போட்டியிட்டது. இதில் 5 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், வெற்றி பெற்ற 4 எம்.எல்.ஏ.க்கள் பின்னர் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | காங்கிரஸில் இணைந்தார் பாட்டியாலா முன்னாள் மேயர் சஞ்சீவ் சர்மா
Summary
Bihar Election 2025 AIMIM announces the list of 25 candidates for the upcoming
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!

பிகார்: மெமு ரயிலின் 2 பெட்டிகளில் தீ விபத்து

பிகார் பாங்கிபூர் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

பிகார், அசாம் இளைஞர்கள் மீதான வழக்குகள் வாபஸ்; மற்ற மாநிலங்களிலும்...! சிஜேபி எச்சரிக்கை
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்! பேரவையில் முதல்வர் Vijay பேச்சு! | TN Assembly | TVK


