6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எல்லையில் தீபாவளி கொண்டாடிய ராணுவ வீரர்கள்!

ஜம்மு - காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் ராணுவ வீரர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.

News image
எல்லையில் தீபாவளி கொண்டாடிய வீரர்கள்- படம் - ஏஎன்ஐ
Updated On :19 அக்டோபர் 2025, 3:52 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஜம்மு - காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் ராணுவ வீரர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.

செனாப் நதியில் அமைந்துள்ள அக்னூர் பகுதியில் விளக்குகளை ஏற்றியும் இனிப்புகளைப் பகிர்ந்தும் தீபாவளியை கொண்டாடி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

நாடு முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையையொட்டி பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ள நிலையில் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் எல்லைப் பகுதியிலேயே தீபாவளியைக் கொண்டாடினர்.

தீபாவளி கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் அமைந்துள்ள வேலியில் தீபங்களை ஏற்றி அண்டை நாட்டுடன் தீப ஒளியைப் பகிர்ந்துகொண்டனர். மேலும், பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

summary

Jammu and Kashmir: Indian Army soldiers posted along the Line of Control

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.