மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபால்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் சமோசா வாங்குவதற்கு கட்டாயப்படுத்தப்படும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
ரயில் பயணங்களின்போது பல தருணங்கள் மறக்க முடியாதவையாக மாறுவது வழக்கம். பல மனிதர்கள், வியாபாரிகள், விதவிதமான உணவு வகைகள், ரயில் நிலையங்கள் எனப் பலவற்றைப் பயணிகள் கடந்து செல்வார்கள்.
ஆனால், மத்தியப் பிரதேசத்திற்குட்பட்ட ரயில் நிலையத்தில் நடந்துள்ள சம்பவம் பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பயணிகள் இறங்குவதற்காக ஜபால்பூர் ரயில் நிலையத்தில் 2 நிமிடங்களுக்கு ரயில் நின்றுள்ளது.
அப்போது ரயிலில் இருந்து இறங்கிய பயணி ஒருவர், ரயில் நிலைய விற்பனையாளரிடம் சமோசா வாங்கியுள்ளார்.
அதற்குரிய தொகையை இணையப் பரிவத்தனை செய்யும்போது இயந்திரக் கோளாறால் பணம் செலுத்த முடியவில்லை. தொடர்ந்து பணம் செலுத்த முயன்றபோது, ரயில் புறப்பட்டதால், சமோசாவை கொடுத்துவிட்டு ரயில் ஏற முயன்றுள்ளார்.
எனினும் ரயில் நிலைய விற்பனையாளர், வாடிக்கையளரின் சட்டையைப் பிடித்துக்கொண்டு சமோசா வாங்க கட்டாயப்படுத்தியுள்ளார். அதற்குரிய தொகையையும் கேட்டுள்ளார். ரயிலைத் தவற விடக்கூடாது என்பதற்காக தன்னிடமிருந்த கைக்கடிகாரத்தை கழற்றிக் கொடுத்துள்ளார் பயணி. இந்த விடியோ அங்கிருந்த மற்றொரு பயணியால் விடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விடியோ பலரால் பகிரப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகம் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது. ரயில்வே காவல் துறையினரின் மூலம் சமோசா விற்பனையாளர் கைது செய்யப்பட்டு அவரின் உரிமத்தையும் மாவட்ட நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
ரயில் நிலைய விற்பனையாளர்களால் பயணிகள் அவதியுறும் இந்த விடியோவில் பலரும் தங்களுக்கு நேர்ந்த துயரமான ரயில் நிலைய அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிக்க | ஆமிர் கான், அக்ஷய் குமார் வாங்கிய காரை பரிசளித்துக்கொண்ட யூடியூபர்!
Summary
madhya pradesh Jabalpur Railway Station samosa vendor Viral Video
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முன்பே வா என் அன்பே வா! த்ரிஷாவின் புதிய வைரல் விடியோ!

யூடியூப் விடியோவில் ஏஐ காட்சிகளை அடையாளம் காண்பது எப்படி?

திருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோ
எழும்பூர் ரயில் நிலையத்தில் விதிமீறல்: பயணிகள் பாதிப்பு!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



