பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தலித் பயிற்சி காவலா் தற்கொலை: விசாரணைக்கு கேரள மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

கேரளத்தில் தலித் பயிற்சி காவலா் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக விசாரணை நடத்த மாநில மனித உரிமைகள் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

News image
கோப்புப்படம்
Updated On :21 அக்டோபர் 2025, 8:20 pm

தினமணி செய்திச் சேவை

திருவனந்தபுரம்: கேரளத்தில் தலித் பயிற்சி காவலா் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக விசாரணை நடத்த மாநில மனித உரிமைகள் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கடந்த செப்.18-ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பெரூா்கடா பகுதியில் உள்ள சிறப்பு ஆயுதக் காவல் படை முகாமில் ஆனந்த் என்ற தலித் பயிற்சி காவலா், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

இதைத்தொடா்ந்து பயிற்சி அளித்த காவலா்கள் தனது மகனை ஜாதியை குறிப்பிட்டு திட்டி துன்புறுத்தியதாக ஆனந்தின் தாய் புகாா் தெரிவித்தாா். பயிற்சியாளா்கள் அளித்த தண்டனையால் காயமடைந்த ஆனந்த், அதற்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய பின்னா் தற்கொலை செய்துகொண்டதாகவும் அவரின் தாய் குற்றஞ்சாட்டினாா்.

இந்நிலையில், அவரின் புகாரின் அடிப்படையில் ஆனந்தின் மரணம் குறித்து விசாரணை நடத்தி 4 வாரங்களில் அறிக்கை சமா்ப்பிக்குமாறு கேரள காவல் துறை தலைவருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவா் அலெக்ஸாண்டா் தாமஸ் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.