திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பண்டிகையையொட்டி 12,000 சிறப்பு ரயில்கள் இயக்கம்: மத்திய அரசு

தமிழ்நாட்டிற்கு 281 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.

News image

கோப்புப் படம்

Updated On :22 அக்டோபர் 2025, 10:07 pm IST

பண்டிகை காலத்தையொட்டிய தொடர் விடுமுறையால் பயணிகள் வசதிக்காக 12,075 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதாக மத்திய ரயில்வே துறை இன்று (அக். 22) தெரிவித்துள்ளது.

மக்களுக்கான சேவை மற்றும் நம்பகத்தன்மையைப் பெறும் வகையில் ரயில்வே துறை செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மாநிலவாரியாக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை குறித்தும் பட்டியலிட்டுள்ளது.

இதில், அதிகபட்சமாக பிகார் - 2,220 சிறப்பு ரயில்கள், மகாராஷ்டிரம் - 2,190 ரயில்கள், உத்தரப் பிரதேசம் - 1,170 ரயில்கள், ராஜஸ்தான் - 961, குஜராத் - 839, கர்நாடகம் - 528, ஹரியாணா - 344 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.

குறைந்தபட்சமாக அருணாசலப் பிரதேசம் 16, சண்டிகர் - 30, கோவா - 61, திரிபுரா - 90 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிற்கு 281 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.

அண்டை மாநிலங்களாக கேரளம் - 257, ஆந்திரம் - 382, தெலங்கானா - 307 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

12,000 special trains to run during the festival Central Government

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.