ஒவ்வொரு சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் மற்ற கட்சி வேட்பாளர்களை பாஜக விலைக்கு வாங்குவதாக ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
வேட்புமனுத் தாக்கலின்போது மற்ற கட்சி வேட்பாளர்களை அமித் ஷா சந்திப்பது ஏன்? என்றும் பேரம் பேசிவிட்டு வேட்புமனுத் தாக்கல் செய்ய வைப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது,
''கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 10 - 12 இடங்களில் இழுபறி நீடித்து வந்தது. எனினும், தேசிய ஜனநாயகக் கூட்டணி தங்களுக்கு சாதகமாக வெற்றியை அறிவித்துவிட்டது. சசி சேகர் சின்ஹா எப்போது பாஜகவில் இருந்தார் என்பதை அவர்கள் (பாஜக) சொல்ல வேண்டும். அவர் ஜன் சுராஜ் கட்சியில் சேர்ந்தார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் இருந்தும் பாஜகவில் இருந்தும் பல தலைவர்கள் ஜன் சுராஜ் கட்சியில் சேர்ந்தனர். அவர் பாஜகவின் ஒழுக்கமான நிர்வாகியாக இருந்தால், ஜன் சுராஜில் சேர்ந்தது ஏன்? ஜன் சுராஜ் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைத்ததும் அவரை உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்தது ஏன்? பின்னர் அவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார். இதேபோன்று வேட்புமனுத்தாக்கல் அன்று முதுர் ஷாவை பாஜகவினர் சந்தித்தது ஏன்?
எங்கள் கட்சியின் பல வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன்பே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதுவரை இவ்வாறு 3 பேருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு, வேட்புமனுவை திரும்பப் பெற வைத்துள்ளது பாஜக.
வாக்காளர்களை அச்சுறுத்துவதற்கு ஒழுங்கு நடவடிக்கை உள்ளது. ஆனால், வேட்பாளர்களை அச்சுறுத்துவதற்கு எந்தவித நடவடிக்கையும் இல்லை. அமைச்சர் அமித் ஷாவும், பிகார் தேர்தல் பாஜக பொறுப்பாளர் தர்மேந்திர பிரதானும் எங்கள் வேட்பாளர்களுக்கு இதைத்தான் செய்கின்றனர். உள்துறை அமைச்சர் தங்கள் தலைவர்களுடன் சூழும்போது ஒரு வேட்பாளரால் என்ன செய்ய முடியும்? தேர்தல் ஆணையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளோம்'' எனக் குறிப்பிட்டார்.
Summary
Bihar Assembly election looting candidates Prashant Kishor alleges BJP
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விளவங்கோடு தொகுதியில் நீண்ட பரிசீலனைக்குப் பின் காங்கிரஸ் வேட்பாளா் மனு ஏற்பு

22 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து நெல்லையில் விஜய் பிரசாரம்: செங்கோட்டையன்

திமுக தவிர மற்ற கட்சிகளின் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

சமூக சிக்கல்களுக்குள் சுழலும் அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


