நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

ஹெலிபேட் கான்கிரீட்டில் சிக்கிய குடியரசுத் தலைவர் ஹெலிகாப்டர்!

ஹெலிபேட் கான்கிரீட்டில் சிக்கிய குடியரசுத் தலைவர் ஹெலிகாப்டர்..

News image

ஹெலிபேட் கான்கிரீட்டில் சிக்கிய குடியரசுத் தலைவர் ஹெலிகாப்டர்

Updated On :22 அக்டோபர் 2025, 12:41 pm IST

சபரிமலை பயணம் மேற்கொண்ட குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் ஹெலிகாப்டர், ஹெலிபேட்டின் கான்கிரீட்டில் சிக்கியது.

அங்கிருந்த தீயணைப்பு வீரர்களும், காவலர்களும் இணைந்து ஹெலிகாப்டரை தள்ளி மீட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, நான்கு நாள்கள் சுற்றுப்பயணமாக கேரள மாநில தலைநகா் திருவனந்தபுரத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றார்.

திருவனந்தபுரம் ஆளுநர் மாளிகையில் நேற்றிரவு தங்கிய குடியரசுத் தலைவர், இன்று காலை சபரிமலைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

திருவனந்தபுரத்திலிருந்து இருந்து இந்திய விமானப் படை ஹெலிகாப்டா் மூலம் பத்தனம்திட்டா மாவட்டம், பிரமாடம் உள்விளையாட்டு அரங்கில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் தரையிறங்கினார்.

அப்போது, ஹெலிபேடின் கான்கிரீட்டில் ஹெலிகாப்டரின் சக்கரம் சிக்கிக் கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக, அங்கிருந்த தீயணைப்பு வீரர்களும், காவலர்களும் இணைந்து ஹெலிகாப்டரை தள்ளி மீட்டனர்.

தொடர்ந்து, அங்கிருந்து கார் மூலம் பம்பா நிதிக் கரைக்குச் சென்ற திரெளபதி முர்முக்கு திருவிதாங்கூா் தேவஸ்வம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து இருமுடிக் கட்டி, மலையேறும் ஜீப் மூலம் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த பாதையில் சபரிமலை சன்னிதானம் சென்றடைந்தார்.

இருமுடியுடன் 18 படிகள் ஏறிய திரெளபதி முர்மு, ஐயப்பனை தரிசனம் செய்தார்.

ஹெலிகாப்டர் சிக்கியது எப்படி?

திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பத்தனம்திட்டா மாவட்டம், நிலக்கல் சென்றடையும் வகையிலேயே பயணத் திட்டம் செய்யப்பட்டிருந்தது.

ஆனால், கடைசி நேரத்தில் வானிலை மோசமாக இருந்ததால் பிரமாடம் உள்விளையாட்டு அரங்கில் ஹெலிகாப்டரை தரையிறக்க நேற்றிரவு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரவோடு இரவாக பிரமாடம் உள்விளையாட்டு அரங்கில் கான்கிரீட் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலைதான் ஹெலிபேட் அமைக்கும் பணி நிறைவடைந்ததால், கான்கிரீட் முழுமையாக காயாமல் இருந்துள்ளது.

இதன்காரணமாக குடியரசுத் தலைவரின் ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது சக்கரம் கான்கிரீட்டில் சிக்கியுள்ளது.

இருப்பினும், உடனடியாக ஹெலிகாப்டர் மீட்கப்பட்டு, பயணத்தில் மாற்றமின்றி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பம்பை சென்றடைந்தார்.

Summary

Presidential helicopter gets stuck in helipad concrete

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.