தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

கூட்டாக செய்தியாளர் சந்திப்பு? தேஜஸ்வி படம் மட்டும்! வறுத்தெடுக்கும் பாஜக

கூட்டாக செய்தியாளர் சந்திப்பு? என்று கூறி தேஜஸ்வி படம் மட்டும் வைக்கப்பட்டிருப்பதை பாஜக விமர்சித்துள்ளது.

போஸ்டர்

Published On :

புது தில்லி: மகாகத்பந்தன் கூட்டணி சார்பில், கட்சித் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வைக்கப்பட்டிருந்த போஸ்டரில், தேஜஸ்வி புகைப்படம் மட்டும் இடம்பெற்றிருந்தது குறித்து பாஜக கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளது.

கூட்டாக செய்தியாளர் சந்திப்பு? ஆனால், ஒரே ஒருவரின் புகைப்படம் என்று பதிவிட்டு, புகைப்படங்களை பாஜக பகிர்ந்துள்ளது.

இந்தியா கூட்டணி சார்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு, தங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வியை அறிவிக்க கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டணிக்குள் நிலவி வந்த சில சிக்கல்கள் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் அசோக் கெலாட், கிருஷ்ணா அல்லவாரு உள்ளிட்டோர் தேஜஸ்வி மற்றும் லாலு பிரசாத் யாதவை சந்தித்துப் பேசி சுமூக முடிவு எட்டப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வியை வியாழக்கிழமை நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும், ஒட்டுமொத்த பிகாருக்கும் தேஜஸ்வி தெரியும் என்பதால், இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்க இது வகை செய்யும் என்றும் அரசியல் கட்சியினர் கூறியிருக்கிறார்கள்.

தங்கள் கூட்டணிக்குள் எந்த குழப்பமும் இல்லை என்றும் சுமூகமான முடிவு எட்டப்பட்டிருப்பதாகவும் தேஜஸ்வி கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.