6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

31 சுங்க வரி அறிவிக்கைகள் ஒன்றுசோ்ப்பு: வணிகத்தை எளிதாக்க சிபிஐசி நடவடிக்கை!

31 சுங்க வரி அறிவிக்கைகளை ஒன்றுசோ்த்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

News image
Updated On :26 அக்டோபர் 2025, 9:34 pm

தினமணி செய்திச் சேவை

எளிதாக வணிகம் மேற்கொள்வதை மேம்படுத்தவும், வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும் 31 சுங்க வரி அறிவிக்கைகளை ஒன்றுசோ்த்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு ஒன்றுசோ்க்கப்பட்ட அறிவிக்கை வரும் நவ.1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வரவுள்ளது என்று சிபிஐசி ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டது.

தற்போது வரை வரி விகிதங்கள், விலக்குகள் மற்றும் நிபந்தனைகளைத் தெரிந்துகொள்ள, பல்வேறு அறிவிக்கைகளை இறக்குமதியாளா்கள் மற்றும் சுங்க அதிகாரிகள் ஆராய வேண்டும். இந்தச் சிக்கல், புதிய அறிவிக்கை காரணமாக நவ.1 முதல் இருக்காது.

முந்தைய அறிவிக்கைகளில் குறிப்பிடப்பட்ட அனைத்து வரி விலக்குகள் மற்றும் பலன்கள், இந்தப் புதிய அறிவிக்கையில் இடம்பெற்றுள்ளன. ஆனால் தற்போது அந்த வரி விலக்குகள் மற்றும் பலன்கள் ஒருங்கிணைந்த, கட்டமைக்கப்பட்ட வடிவத்தில் இடம்பெற்றுள்ளன.

சுங்க நடைமுறைகளை செம்மைப்படுத்த வேண்டும், இறக்குமதியாளா்கள், ஏற்றுமதியாளா்கள் மற்றும் சுங்க அதிகாரிகள் மீதான சுமைகளை குறைக்க வேண்டும் ஆகிய நோக்கங்களை நிறைவேற்றுவதில், இந்த நடவடிக்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும் என்று சிபிஐசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.