தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

ம.பி.யில் நீதிபதி வீட்டைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்

மத்தியப் பிரதேசத்தில் நீதிபதியின் வீட்டை மர்ம நபர்கள் தாக்கியதோடு அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

News image

நீதிமன்றம் - கோப்புப்படம்.

Updated On :26 அக்டோபர் 2025, 12:51 pm IST

மத்தியப் பிரதேசத்தில் நீதிபதியின் வீட்டை மர்ம நபர்கள் தாக்கியதோடு அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம், அனுப்பூர் மாவட்டத்தில் உள்ள நீதிபதி அமன்தீப் சிங் சாப்ராவின் வீட்டை சனிக்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர். அத்துடன் நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த அந்த கும்பல் பின்னர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதுதொடர்பாக அவர் பாலுமடா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரில், தானும் தனது குடும்பத்தினரும் தூங்கிக் கொண்டிருந்தபோது ஒரு கும்பல் வீட்டிற்கு வந்து, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறியுள்ளார். பிறகு வீட்டின் வாயிலில் இருந்த விளக்கு மற்றும் இரும்பு சாதனங்கள் உள்ளிட்ட சொத்துக்களைச் சேதப்படுத்தியதாகவும், முற்றத்திலும் கற்களை வீசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தான் வீட்டை விட்டு வெளியே வந்ததும் அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும் இந்தத் தாக்குதல் சமீபத்திய நீதிமன்ற உத்தரவுடன் தொடர்புடையதா என்பதையும் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

Summary

Judicial Magistrate First Class (JMFC) Amandeep Singh Chhabra lodged a complaint stating that he and his family were asleep when a group of people arrived at his residence, hurled abuses, and threatened to kill him.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.