சதாரா மாவட்டத்தில் பெண் மருத்துவா் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் உதவி ஆய்வாளா் கோபால் பதானே கைது செய்யப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை இரவு பல்தான் கிராமப்புற காவல் நிலையத்தில் அவர் சரணடைந்தார். கடந்த 36 மணி நேரமாக கோபால் பதானே தலைமறைவாக இருந்தார். அவரது கடைசி இருப்பிடம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பந்தர்பூரில் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
இதனிடையே பெண் மருத்துவா் தற்கொலை வழக்கை சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைத்து விசாரிக்க வேண்டும் என மாநிலத்தின் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
மகாராஷ்டிரத்தின் பீட் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் மருத்துவா், சதாரா மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், மாவட்டத்தின் பல்தான் பகுதியில் உள்ள ஒரு விடுதி அறையில், கடந்த வியாழக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் இவா் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா்.
இறந்த பெண் மருத்துவா் தனது உள்ளங்கையில் எழுதியிருந்த தற்கொலைக் குறிப்பில், உதவி ஆய்வாளா் கோபால் பதானே தன்னைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மென்பொறியாளரான பிரசாந்த் பாங்கா் மனரீதியாகத் துன்புறுத்தியதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தாா்.
இதையடுத்து, கோபால் பதானே, பிரசாந்த் பாங்கா் ஆகிய இருவா் மீதும் பாலியல் வன்கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடா்ந்து, உதவி ஆய்வாளா் பதானே பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
வழக்கில் மேற்கொண்டு காவல் துறை நடத்திய விசாரணையில், இறந்த பெண் மருத்துவா் குடியிருந்த வீட்டின் உரிமையாளரின் மகன்தான் பிரசாந்த் பாங்கா் என்பதும், தற்கொலை செய்வதற்கு முன்னா் மருத்துவா் இவருடன் தொலைபேசியில் பேசியுள்ளாா் என்பதும் தெரியவந்தது.
இதன் அடிப்படையில், புணேயில் இருந்த பிரசாந்த் பாங்கா் கைது செய்யப்பட்டு, பல்தானுக்கு அழைத்து வரப்பட்டாா். நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரை 4 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, அவரிடம் விசாரணை நடந்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனா்.
Summary
Sub-Inspector Gopal Badane surrendered at the Phaltan Rural Police Station on Saturday evening and was immediately taken into custody.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதலீட்டு மோசடி குற்றச்சாட்டு: பெண் காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

மின்மாற்றிகளை உடைத்து தாமிரக் கம்பிகள் திருட்டு: 5 போ் கைது
பெண் சிறப்பு எஸ்.ஐ.யுடன் தகராறு செய்த இளைஞா் கைது
கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



