

‘மோந்தா’ புயல் அக். 28-இல் கரையைக் கடக்கவுள்ள நிலையில், பயணிகளின் பாதுகாப்பு கருதி தெற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் அக். 28, 29 ஆகிய இரு நாள்கள் மொத்தம் 67 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்து தெற்கு மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள முழுவிவரம் பின்வருமாறு:
விஜயவாடா, பீமவரம், நிடாடவொலு, ராஜமுந்திரி, குண்டூர், காக்கிநாடா துறைமுகம், தெனாலி, ரெபல்லே, மார்கபூர் ரோடு, மச்சிலிப்பட்டினம், குடிவடா, நர்சபூர், ஓங்கோல், மச்சேர்லா, திருப்பதி, விசாகப்பட்டினம், ஹைதராபாத்,மஹ்பூப்நகர், செகந்திராபாத் ரயில்கள் அக். 28, 29 ரத்து செய்யப்பட்டிருப்பதுடன், சென்னை சென்ட்ரல் - விசாகப்பட்டினம் இடையேயான ரயில்(வண்டி.எண்: 22870) அக். 28 அன்று ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.