ரயில்களில் முன்பதிவு தொடங்கும் முதல் நாளில் காலை 8 மணி முதல் காலை 10 மணி வரை ஆதார் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) அறிவித்துள்ளது. இந்த விதிமுறை இன்று (அக் 28) முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி செயலியைப் பயன்படுத்துவோருக்கு அறிவிக்கை மூலம் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புவோர் தங்கள் ஆதார் உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே வழங்கி சேமித்து வைக்க வேண்டும்.
விடுமுறை நாள்களைக் கொண்டாட சொந்த ஊர் செல்வோர் மற்றும் பண்டிகை நாள்களில் சொந்த ஊர்களுக்குச் செல்வோருக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு முன்கூட்டியே தொடங்கும். சில நிமிடங்களில் ரயில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிடும். இதனால், பல தொழில்நுட்ப பிரச்னைகளில் சிக்காமல் டிக்கெட்டை முன்பதிவு செய்வதில் பயனர்கள் பலரும் கவனம் செலுத்தி வருவார்கள்.
அந்தவகையில் தற்போது ஆதார் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே முன்பதிவு செய்யும் வகையில் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, முன்பதிவு தொடங்கும் முதல் நாளில் காலை 8 மணி முதல் காலை 10 மணி வரை ஆதார் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம் என ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.
Summary
Priority in train ticket booking for those with Aadhaar authentication irctc
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குற்றாலம் சீசன்: வாரத்தில் 3 நாள்கள் கனரக வாகனங்களுக்குத் தடை

பவானி - துபை டிக்கெட் விவகாரம்! அரசு மறுப்பு
முன்சிறை, நடைக்காவு பகுதியில் நாளை மின் நிறுத்தம்

கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: கூட்டமான நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



