சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பாக். அமைப்புடன் தொடர்பு! சென்னை நிகழ்ச்சிகளில் பங்கேற்பு! தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் கைது!

மகாராஷ்டிரத்தில் இளைஞர்களை தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்திய அல் கொய்தா அமைப்புடன் தொடர்புடையவர் கைது

News image
பிரதிப் படம்
Updated On :28 அக்டோபர் 2025, 3:06 am

இணையதளச் செய்திப் பிரிவு

மகாராஷ்டிரத்தில் தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஜுபைர் ஹேங்கர்கேகர் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மகராஷ்டிர மாநிலம், புணேவில் மென்பொறியாளராக இருந்துவந்த ஜுபைர் ஹேங்கர்கேகர் (35) என்பவர், தேச விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாகச் சந்தேகிக்கப்பட்டு, கடந்த ஒருமாத காலமாக பயங்கரவாதத் தடுப்புக் குழுவின் (ATS) கண்காணிப்பில் இருந்து வந்தார்.

இந்த நிலையில், அவர் பாகிஸ்தானின் அல் கொய்தா போன்ற தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், இளைஞர்களை தேச விரோத நடவடிக்கையில் ஈடுபடத் தூண்டியதும் தெரிய வந்தது.

மேலும், இவர் மகாராஷ்டிரம் மற்றும் பிற மாநிலங்களிலும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு திட்டமிட்டதும் தெரிய வந்தது. இளைஞர்களை தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்த ஜுபைர் பயன்படுத்திய பொருள்களும் அவரது இருப்பிடத்திலிருந்து கைப்பற்றப்பட்டது.

முன்னதாக, ஜுபைரும் அவரது நண்பரும் சென்னை வந்து சென்றுள்ளனர். இதுகுறித்த விசாரணையில், இருவரும் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்ததாகக் கூறினர்.

இதனைத் தொடர்ந்து, இவரை கைது செய்த பயங்கரவாதத் தடுப்புக் குழுவால் கைது செய்யப்பட்டு, உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

இதனையடுத்து, ஜுபைரை நவ. 4 ஆம் தேதிவரையில் போலீஸ் காவலுக்கு அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டது.

summary

Puen: Techie arrested for possessing 'Al-Qaida literature'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.