சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

சத்தீஸ்கரில் 51 மாவோயிஸ்டுகள் சரண்!

சத்தீஸ்கரில் 51 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளது குறித்து...

News image

கோப்புப் படம்

Updated On :29 அக்டோபர் 2025, 12:47 pm

சத்தீஸ்கரில், 51 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரிடம் இன்று (அக். 29) சரணடைந்துள்ளனர்.

சத்தீஸ்கரின், பிஜப்பூர் மாவட்டத்தில் கூட்டாக ரூ.66 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 9 பெண்கள் மற்றும் 42 ஆண்கள் என மொத்த 51 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

இந்தக் குழுவில், தலா ரூ. 8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட புத்ராம் போதம் (எ) ரஞ்சித், மன்கி கொவாசி, ஹுங்கி சோதி மற்றும் ரவிந்திரா புனெம் உள்ளிட்ட மாவோயிஸ்ட் மூத்த தளபதிகளும் சரணடைந்துள்ளனர்.

இதுபற்றி, காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், சரணடையும் மாவோயிஸ்டுகளின் மறுவாழ்விற்காக அரசு அறிவித்துள்ள திட்டங்களினால் ஈர்க்கப்பட்டு இவர்கள் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிஜப்பூரில் 2025 ஆம் ஆண்டு மட்டும் 461 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர். மேலும், 138 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

In Chhattisgarh, 51 Maoists, including 9 women, surrendered to security forces today (Oct. 29).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.