திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

கேஒய்சி மோசடியில் சிக்காமல் தப்பிப்பது எப்படி?

கேஒய்சி மோசடியில் சிக்காமல் தப்பிப்பது எப்படி என்பது பற்றி

கேஒய்சி

Published On :29 அக்டோபர் 2025, 5:46 pm IST

வங்கிப் பணி உள்ளிட்ட பல வேலைகளை இருந்த இடத்திலிருந்தே மேற்கொள்ளும் வகையில் டிஜிட்டல் சேவை வளர்ச்சியடைந்திருக்கும் நிலையில், மோசடியாளர்களும் இருந்த இடத்திலிருந்தே கைவரிசையைக் காட்டி வருகிறார்கள்.

டிஜிட்டல் மோசடிகள் தொடங்கிய நாளிலிருந்து வெளியாவது கேஒய்சி முறைகேடுதான். அதிலிருந்து தப்புவது எப்படி என்பதை மக்கள் நிச்சயம் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

ஆன்லைன் கேஒய்சி முறைகேடு

ஒரு சேவை அமைப்பானது அதன் வாடிக்கையாளரை அடையாளம் கண்டு உறுதி செய்வதே உங்கள் வாடிக்கையாளரை அறியுங்கள் என்ற கேஒய்சியாகும்.

வங்கிகள், நிதி நிறுவனங்கள், ஆன்லைன் சேவை வழங்கும் நிறுவனங்கள் என அனைத்தும் இதை மேற்கொள்ளும். ஆனால், இதே முறையை மோசடியாளர்களும் பயன்படுத்திக் கொண்டு அப்பாவி மக்களின் தனிப்பட்ட மற்றும் ரகிசயம் காக்கப்பட வேண்டிய தகவல்களைப் பெற்று மோசடி செய்கிறார்கள்.

போலி இணையதளம்

வங்கி உள்ளிட்ட அதிகாரப்பூர்வ நிறுவனங்களின் பெயர்களில் போலியாக இணையதளம் உருவாக்கி, அதன் லிங்குகள் மக்களுக்கு அனுப்பி, கேஒய்சி பூர்த்தி செய்து கொடுக்குமாறு கூறுவார்கள். அதில் பெயர், முகவரி, செல்போன் எண், ஆதார் எண், வங்கிக் கணக்கு எண் போன்ற தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும்.

யாராவது, இதனை உண்மை என நம்பி பூர்த்தி செய்து கொடுத்தால், அந்தத் தகவலைப் பயன்படுத்தி, அவர்களிடமிருந்து பணத்தை மோசடி செய்துவிடுவார்கள்.

மின்னஞ்சல் முகவரியை சோதியுங்கள்

குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் வழியாகவே கேஒய்சி விண்ணப்பங்களை மோசடியாளர்கள் அனுப்புவார்கள் என்பதால் அவை உண்மையானவையா என உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இரண்டு அடுக்குப் பாதுகாப்பு

வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றுக்கு இரண்டு அடுக்குப் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்துங்கள்.

மேலும் சிலரோ வெறும் தனிப்பட்ட பெயர், செல்போன் எண் உள்ளிட்டவற்றைக் கொண்டு என்ன செய்துவிட முடியும் என்று எளிதாகக் கருதுகிறார்கள். ஆனால் மோசடியாளர்களிடம் ஒருவருடைய குறிப்பிட்ட சில தகவல்கள் கிடைத்தாலே போதும், அதை வைத்து புதிய திட்டம் வகுத்துவிடுவார்கள். எனவே கவனம்.

Summary

How to avoid getting caught in KYC fraud

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.