மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: தேஜஸ்வி

மகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படும்

News image
தேஜஸ்வி யாதவ்
Updated On :29 அக்டோபர் 2025, 6:49 am

இணையதளச் செய்திப் பிரிவு

மகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்றப்படும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

முன்னதாக இந்தியா கூட்டணி சார்பில் நேற்று தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டது. இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யாதவ் கூறியதாவது,

இந்த தேர்தல் அறிக்கை எங்கள் தீர்மானம் மற்றும் உறுதிமொழி. மக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.

ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு அரசு வேலை, பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துதல், அரசுத் துறைகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களை முறைப்படுத்துதல் மற்றும் அவர்களின் சொந்த மாவட்டத்திலிருந்து 70 கி.மீ. தொலைவில் ஆசிரியர்கள், காவல்துறை, சுகாதார பணியாளர்கள் மற்றும் பிற ஊழியர்களின் இடமாற்றம் மற்றும் பணியமர்த்துதலை உறுதி செய்வோம் என்று அவர் கூறினார்.

மாநிலத்தின் அனைத்துப் பிரிவுகளிலும், பத்திரிகையாளர்களுக்காகப் பத்திரிகை மன்றங்களைக் கட்டுவோம் என்று அவர் கூறினார். பத்திரிகையாளர்களுக்காக விடுதிகளும் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது தேர்தல் அறிக்கையை இன்னும் வெளியிடாததற்காக அவர் கடுமையாகச் சாடினார்.

துணை முதல்வராக இருந்தபோது யாதவ் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்க வேண்டும் என்ற மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கின் கருத்துக்குப் பதிலளித்த ஆர்ஜேடி தலைவர், மகா கூட்டணி அரசு ஆட்சியிலிருந்தபோது 17 மாதங்களில் நாங்கள் செய்ததை, கிரிராஜ் சிங் தனது வாழ்நாள் முழுவதும் செய்யவில்லை என்று அவர் கூறினார்.

summary

RJD leader Tejashwi Yadav on Wednesday asserted that the manifesto of the INDIA bloc, released on the previous day, is the alliance's resolution and commitment, and that every promise would be fulfilled if the Mahagathbandhan is voted to power.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.