பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

குருநானக் ஜெயந்தி! 2,100 சீக்கியர்கள் பாகிஸ்தான் செல்ல அனுமதி!

குருநானக் ஜெயந்திக்காக 2,100 இந்திய சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் விசா வழங்கியுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :29 அக்டோபர் 2025, 10:27 am

இணையதளச் செய்திப் பிரிவு

குருநானக் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக 2,100 சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் உயர் ஆணையம் விசா வழங்கியுள்ளது.

பாகிஸ்தானில், வருகிற நவம்பர் 4 ஆம் தேதிமுதல் 13 வரையில் குருநானக் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெறும் கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ள இந்தியாவைச் சேர்ந்த 2,100 சீக்கியர்களுக்கு தில்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையம் விசா வழங்கியுள்ளது.

முன்னதாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான உறவுநிலை இருந்தபோதிலும், பாகிஸ்தானுக்கு இந்திய சீக்கியர்கள் செல்ல அனுமதியளித்த பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தில்லி அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா நன்றி தெரிவித்திருந்தார்.

summary

Pakistan High Commission issues 2100 visas ahead of Guru Nanak Jayanti

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.