குருநானக் ஜெயந்தி! 2,100 சீக்கியர்கள் பாகிஸ்தான் செல்ல அனுமதி!

குருநானக் ஜெயந்திக்காக 2,100 இந்திய சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் விசா வழங்கியுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

குருநானக் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக 2,100 சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் உயர் ஆணையம் விசா வழங்கியுள்ளது.

பாகிஸ்தானில், வருகிற நவம்பர் 4 ஆம் தேதிமுதல் 13 வரையில் குருநானக் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெறும் கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ள இந்தியாவைச் சேர்ந்த 2,100 சீக்கியர்களுக்கு தில்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையம் விசா வழங்கியுள்ளது.

முன்னதாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான உறவுநிலை இருந்தபோதிலும், பாகிஸ்தானுக்கு இந்திய சீக்கியர்கள் செல்ல அனுமதியளித்த பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தில்லி அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா நன்றி தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: 7 புதிய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன! இந்தியா - பாக். போர் குறித்து டிரம்ப்!

Summary

Pakistan High Commission issues 2100 visas ahead of Guru Nanak Jayanti

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com