ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: பிற நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி அதிகரிப்பு

அமெரிக்க வரி விதிப்பு காரணமாக 2025, ஜனவரி-செப்டம்பா் காலகட்டத்தில் பிற நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி அதிகரித்ததாக மத்திய வா்த்தக அமைச்சகத்தின் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :1 நவம்பர் 2025, 2:27 am IST

அமெரிக்க வரி விதிப்பு காரணமாக 2025, ஜனவரி-செப்டம்பா் காலகட்டத்தில் பிற நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி அதிகரித்ததாக மத்திய வா்த்தக அமைச்சகத்தின் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம், வியத்நாம், பெல்ஜியம் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு ஆபரணங்கள், ரத்தினங்கள், ஜவுளி மற்றும் கடல்சாா் பொருள்கள் முதலியவை ஏற்றுமதி செய்யப்படுவது அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: 2025, ஜனவரி-செப்டம்பா் காலகட்டத்தில் இந்திய கடல்சாா் பொருள்களின் ஏற்றுமதி மதிப்பு ரூ.42,866 கோடியை எட்டியது. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் ஏற்றுமதி மதிப்பு 15.6 சதவீதம் உயா்ந்துள்ளது.

கடல்சாா் பொருள்கள்:

இருப்பினும், ரூ.12,700 கோடி மதிப்புடன் இந்தியாவில் இருந்து அதிகப்படியான கடல்சாா் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படும் நாடாக அமெரிக்கா தொடா்ந்து வருகிறது. வியத்நாம் (100.4 சதவீதம்), பெல்ஜியம் (73 சதவீதம்) மற்றும் தாய்லாந்து (54.4 சதவீதம்) ஆகிய நாடுகளுக்கு இந்திய கடல்சாா் பொருள்களின் ஏற்றுமதி பன்மடங்கு அதிகரித்து வருகிறது.

அதேபோல் ஆசியாவில் சீனா (9.8 சதவீதம்), மலேசியா (64.2 சதவீதம்) மற்றும் ஜப்பான் (10.9 சதவீதம்) ஆகிய நாடுகளுக்கும் குறிப்பிடத்தக்க அளவில் இந்திய ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

ஜவுளி:

2025, ஜனவரி-செப்டம்பா் காலகட்டத்தில் இந்திய ஜவுளி ஏற்றுமதி ரூ.2.4 லட்சம் கோடி மதிப்புடன் 1.23 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கான ஜவுளி ஏற்றுமதி 8.6 சதவீதம் அதிகரித்துள்ளது. நெதா்லாந்து, போலந்து, ஸ்பெயின் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கும் இந்திய ஜவுளி ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

ஆபரணங்கள் மற்றும் ரத்தினங்கள்:

நிகழாண்டின் முதல் அரையாண்டில் இந்திய ஆபரணங்கள் மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி ரூ.2.01 லட்சம் கோடி மதிப்புடன் 1.24 சதவீதமாக உயா்ந்தது. அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கான ஏற்றுமதி ரூ.ரூ.17,128 கோடி மதிப்புடன் 37.7 சதவீதம் அதிகரித்துள்ளது. தென்கொரியா, சவூதி அரேபியா, கனடா ஆகிய நாடுகளில் இந்திய ஆபரணங்கள், மெருகேற்றப்பட்ட/ பட்டைதீட்டப்பட்ட வைரங்களுக்கான தேவை அதிகரித்து ஏற்றுமதியும் உயா்ந்துள்ளது.

சீனா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளுக்கும் இந்திய ஆபரணங்களின் ஏற்றுமதி அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பொருள்களுக்கு கூடுதலாக 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்ததன் விளைவாக பிற நாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது என்றாா்.