தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஜார்க்கண்டில் 9 நக்சல்கள் சரண்!

ஜார்க்கண்டில் 9 நக்சல்கள் சரணடைந்துள்ளது குறித்து...

News image

ஜார்க்கண்டில் 9 நக்சல்கள் சரண்...

Updated On :2 செப்டம்பர் 2025, 7:18 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஜார்க்கண்ட் மாநிலத்தில், 9 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

லதேஹர் மாவட்டத்தில், ஜார்க்கண்ட் ஜன் முக்தி பரிஷாத் எனும் அமைப்பில் இயங்கி வந்த 9 நக்சல்கள், பாதுகாப்புப் படையினரிடம் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சரணடைந்த நக்சல்களில் 5 பேரை ஏற்கெனவே, பாதுகாப்புப் படை அதிகாரிகள் வெகுமதி அறிவித்து தேடி வந்ததாகவும், அவர்களிடம் இருந்து ஏக, எஸ்.எல்.ஆர் ரகங்களைச் சேர்ந்த 12 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அம்மாநில அதிகாரிகள் கூறியுள்ளனர்.

முன்னதாக, நாராயணப்பூர் மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் மூலம், அபூஹ்மத் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த, ஆக.27 ஆம் தேதி, சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் இயங்கி வந்த சுமார் 30 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

In Jharkhand, 9 Naxalites belonging to the Jharkhand Jan Mukti Parishad have reportedly surrendered to security forces.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.