ஜார்க்கண்ட் மாநிலத்தில், 9 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.
லதேஹர் மாவட்டத்தில், ஜார்க்கண்ட் ஜன் முக்தி பரிஷாத் எனும் அமைப்பில் இயங்கி வந்த 9 நக்சல்கள், பாதுகாப்புப் படையினரிடம் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சரணடைந்த நக்சல்களில் 5 பேரை ஏற்கெனவே, பாதுகாப்புப் படை அதிகாரிகள் வெகுமதி அறிவித்து தேடி வந்ததாகவும், அவர்களிடம் இருந்து ஏக, எஸ்.எல்.ஆர் ரகங்களைச் சேர்ந்த 12 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அம்மாநில அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முன்னதாக, நாராயணப்பூர் மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் மூலம், அபூஹ்மத் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த, ஆக.27 ஆம் தேதி, சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் இயங்கி வந்த சுமார் 30 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
In Jharkhand, 9 Naxalites belonging to the Jharkhand Jan Mukti Parishad have reportedly surrendered to security forces.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!
ஆயுதங்கள் கடத்தல்: 9 போ் கைது; 23 துப்பாக்கிகள் பறிமுதல்

மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஜார்க்கண்டில் 840 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்: பிகாரைச் சேர்ந்த 6 பேர் கைது
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


