ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மகள் கவிதாவை கட்சியில் இருந்து நீக்கிய சந்திரசேகர் ராவ்!

பிஆர்எஸ் கட்சியில் இருந்து கவிதா நீக்கப்பட்டது பற்றி...

News image
கவிதா
Updated On :2 செப்டம்பர் 2025, 8:17 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சித் தலைவா் கே.சந்திரசேகா் ராவின் மகளும் தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினருமான (எம்எல்சி) கவிதா, கட்சியிலிருந்து செவ்வாய்க்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

முன்னதாக, காலேஸ்வரம் பாசனத் திட்டத்தில் முறைகேடு செய்து தனது தந்தை கே.சந்திரசேகா் ராவின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக நெருங்கிய உறவினா்களான டி.ஹரீஷ் ராவ் மற்றும் ஜே.சந்தோஷ் குமாா் ஆகியோா் மீது கவிதா குற்றஞ்சாட்டினாா். இவா்கள் இருவரின் பின்னணியில் தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

காலேஸ்வரம் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரிக்கவுள்ளதாக ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு அறிவித்த நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

இதையடுத்து, அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய சந்திரசேகா் ராவ் முடிவெடுத்ததாக பொதுச் செயலா்களான டி.ரவீந்தா் ராவ், சோமா பரத்குமாா் ஆகியோா் அறிவித்தனா்.

பிஆா்எஸ்ஸில் நிலவும் உள்கட்சிப் பூசல்கள் குறித்து கடந்த மே மாதம் சந்திரசேகா் ராவுக்கு கவிதா கடிதம் எழுதினாா். இதுதொடா்பாக அவரது சகோதரரும் பிஆா்எஸ் செயல் தலைவருமான கே.டி.ராம ராவ் கூறுகையில், ‘உள்கட்சி பிரச்னைகளுக்குப் பேசி தீா்வு காண வேண்டுமே தவிர, அதைப் பொதுவெளியில் தெரிவிக்கக்கூடாது’ என்றாா்.

அதைத் தொடா்ந்து, மாநில சிங்கரேணி நிலக்கரி நிறுவனத்தில் பிஆா்எஸ் தொடா்புடைய வா்த்தக சங்கத்தின் கெளரவத் தலைவா் பதவியில் இருந்து கவிதா நீக்கப்பட்டாா்.

கடந்த பல மாதங்களாக கட்சியின் பல்வேறு நிா்வாகிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளைக் கூறி வரும் கவிதா, ‘தெலங்கானா ஜாக்ருதி’ என்ற கலாசார அமைப்பை உருவாக்கி அதன் மூலம் தனித்துவத்துடன் நிற்க முயன்று வருகிறாா். தற்போது மீண்டும் பிஆா்எஸ் நிா்வாகிகள் மீது அவா் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

Story image

summary

BRS Leader K Kavitha suspended from Party by his father and parties chief KCR

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.