இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

மேற்கு வங்க பேரவையில் அமளி: 5 பாஜக எம்எல்ஏ-க்கள் இடைநீக்கம்!

மேற்கு வங்க சட்டப்பேரவையில் இருந்து 5 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

News image

மேற்கு வங்க சட்டப்பேரவையில் இருந்து 5 பாஜக எம்.எல்.ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

Updated On :4 செப்டம்பர் 2025, 6:24 pm IST

மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவையில் நடைபெற்ற அமளியைத் தொடர்ந்து 5 பாஜக உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடர், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கியது. அசாம், மகாராஷ்டிரம், குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்களின் மீது வன்முறை நடத்தப்படுவதாக மேற்கு வங்க அரசு குற்றம்சாட்டியது.

அந்த விவகாரம் குறித்த சிறப்புத் தீர்மானம் கொண்டு வருவதற்கு முடிவு செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிராக அமளியில் ஈடுபட்ட அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கடந்த செப்.2 ஆம் தேதி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, இந்தத் தீர்மானம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, சட்டப்பேரவையில் இன்று (செப்.4) அவரது உரையைத் தொடங்கியபோது, எதிர்க்கட்சியான பாஜகவின் கொறடா சங்கர் கோஷ் உள்ளிட்டோர் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, சிறப்பு கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ஒருநாள் மட்டும் இடைநீக்கம் செய்யப்பட்ட சங்கர் கோஷ் அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், அமளியில் ஈடுபட்ட பாஜக உறுப்பினர்களான அக்னிமித்ரா பால், மிஹிர் சோசுவாமி, அசோக் டிண்டா மற்றும் பன்கிம் கோஷ் ஆகியோரும் சபாநாயகரால் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

It has been reported that 5 BJP members will be suspended following the uproar in the West Bengal Assembly.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.