மோசமான வானிலையால் தரையிறங்க முடியாமல் தவித்த ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜீ சென்ற விமானம், கொல்கத்தாவுக்கு திருப்பி விடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜீ, 5 நாள் அரசு முறைப் பயணமாக, தில்லி சென்றிருந்தார். இந்நிலையில், ஒடிசா தலைநகர் புவனேசுவரத்தில் இன்று (செப்.5) காலை 9.45 மணியளவில் அவர் வந்த விமானம் தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கனமழை மற்றும் மோசமான வானிலையால், அவரது விமானம் புவனேசுவரத்தில் உள்ள பிஜு பட்நாயக் பன்னாட்டு விமான நிலையத்தில், தரையிறங்க முடியாமல் அங்கேயே சுமார் 21 நிமிடங்கள் பறந்துக்கொண்டிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்த விமானம் மேற்கு வங்கம் மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவுக்கு, திருப்பி விடப்பட்டு அங்கு பத்திரமாகத் தரையிறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஒடிசா அரசு சார்பில் நடத்தப்படும் முதல்வர் மஜ்ஹி தலைமையிலான ஆசிரியர் நாள் விழாவானது, காலை 11.30 மணியில் இருந்து மாலை 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Summary
It has been reported that the plane carrying Odisha Chief Minister Mohan Charan Majhi was diverted to Kolkata after it was unable to land due to bad weather.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கொல்கத்தாவுக்கு 5-ஆவது தோல்வி!

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்

ராகுல் ஹெலிகாப்டரின் இறங்குதளம் சேதம்: திரிணமூல் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

மரங்களின் வோ்களில் சிக்கி ஏற முடியாமல் தவித்த சிறுத்தை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


