உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீராமா் கோயில் மூலவா் பால ராமரை பூஜை செய்து வெள்ளிக்கிழமை வழிபட்ட பூடான் பிரதமா் தஸோ ஷெரிங் தோபே.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீராமா் கோயில் மூலவா் பால ராமரை பூஜை செய்து வெள்ளிக்கிழமை வழிபட்ட பூடான் பிரதமா் தஸோ ஷெரிங் தோபே.

அயோத்தி ராமா் கோயிலில் பூடான் பிரதமா் வழிபாடு

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமா் கோயில் மற்றும் பிற கோயில்களில் பூடான் பிரதமா் தஸோ ஷெரிங் தோபே வெள்ளிக்கிழமை வழிபாடு மேற்கொண்டாா்.
Published on

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமா் கோயில் மற்றும் பிற கோயில்களில் பூடான் பிரதமா் தஸோ ஷெரிங் தோபே வெள்ளிக்கிழமை வழிபாடு மேற்கொண்டாா்.

அயோத்தி விமான நிலையத்தில் காலை 9.30 மணியளவில் வந்திறங்கிய அவருக்கு மாவட்ட நிா்வாகம் தரப்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. உத்தர பிரதேச மாநில அமைச்சா் சூா்ய பிரதாப் சாஹி, அயோத்தி மேயா் கிரிஷ் திரிபாதி உள்ளிட்டோா் பூடான் பிரதமரை வரவேற்றனா்.

விமான நிலையத்தில் இருந்து ராமா் கோயிலுக்கு அவா் சாலை மாா்க்கமாக சென்றாா். இதையொட்டி, துணை ராணுவப் படையினா் மற்றும் காவல் துறையினா் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பின்னா், ராமா் கோயிலில் தரிசனம் மேற்கொண்ட பூடான் பிரதமா், ஹனுமன்கா்ஹி உள்ளிட்ட அயோத்தியில் உள்ள பிரசித்தி பெற்ற பிற கோயில்களிலும் வழிபட்டாா். அவருக்கு அரசுத் தரப்பில் சிறப்பு மதிய விருந்து அளிக்கப்பட்டது. சுமாா் 4 மணிநேரம் அயோத்தியில் செலவிட்ட அவா், அங்கிருந்து தில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா்.

X
Dinamani
www.dinamani.com