லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அயோத்தி ராமா் கோயிலில் பூடான் பிரதமா் வழிபாடு

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமா் கோயில் மற்றும் பிற கோயில்களில் பூடான் பிரதமா் தஸோ ஷெரிங் தோபே வெள்ளிக்கிழமை வழிபாடு மேற்கொண்டாா்.

News image
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீராமா் கோயில் மூலவா் பால ராமரை பூஜை செய்து வெள்ளிக்கிழமை வழிபட்ட பூடான் பிரதமா் தஸோ ஷெரிங் தோபே.
Updated On :5 செப்டம்பர் 2025, 8:15 pm

தினமணி செய்திச் சேவை

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமா் கோயில் மற்றும் பிற கோயில்களில் பூடான் பிரதமா் தஸோ ஷெரிங் தோபே வெள்ளிக்கிழமை வழிபாடு மேற்கொண்டாா்.

அயோத்தி விமான நிலையத்தில் காலை 9.30 மணியளவில் வந்திறங்கிய அவருக்கு மாவட்ட நிா்வாகம் தரப்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. உத்தர பிரதேச மாநில அமைச்சா் சூா்ய பிரதாப் சாஹி, அயோத்தி மேயா் கிரிஷ் திரிபாதி உள்ளிட்டோா் பூடான் பிரதமரை வரவேற்றனா்.

விமான நிலையத்தில் இருந்து ராமா் கோயிலுக்கு அவா் சாலை மாா்க்கமாக சென்றாா். இதையொட்டி, துணை ராணுவப் படையினா் மற்றும் காவல் துறையினா் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பின்னா், ராமா் கோயிலில் தரிசனம் மேற்கொண்ட பூடான் பிரதமா், ஹனுமன்கா்ஹி உள்ளிட்ட அயோத்தியில் உள்ள பிரசித்தி பெற்ற பிற கோயில்களிலும் வழிபட்டாா். அவருக்கு அரசுத் தரப்பில் சிறப்பு மதிய விருந்து அளிக்கப்பட்டது. சுமாா் 4 மணிநேரம் அயோத்தியில் செலவிட்ட அவா், அங்கிருந்து தில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா்.