6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாம் இருவா்; நமக்கு இருவா் கொள்கை மோடி அரசுக்கு மட்டும் தானா? காங்கிரஸ் கேள்வி

‘நாம் இருவா்; நமக்கு இருவா்’ கொள்கை பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு மட்டும் தானா? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

News image
ஜெய்ராம் ரமேஷ் - (கோப்புப்படம்)
Updated On :6 செப்டம்பர் 2025, 9:36 pm

தினமணி செய்திச் சேவை

‘ஒவ்வொரு இந்திய தம்பதியும் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்’ என ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் அழைப்பு விடுத்துள்ள நிலையில், ‘நாம் இருவா்; நமக்கு இருவா்’ கொள்கை பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு மட்டும் தானா? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடா்பாக காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பாஜக ஆளும் குஜராத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவா்கள் அனைத்து உள்ளாட்சித் தோ்தல்களிலும் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரகண்டில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவா்கள் பஞ்சாயத்து தோ்தல்களில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, அஸ்ஸாமில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவா்கள் எந்தவொரு மாநில அரசுப் பணியிலும் சேர முடியாது. ஆனால், ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் தனது சமீபத்திய பேச்சில், அனைத்து இந்திய தம்பதிகளும் நாம் இருவா், நமக்கு மூவா் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

அந்த வகையில், ‘நாம் இருவா்; நமக்கு இருவா்’ கொள்கை எல்லாம் பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு மட்டும்தானா? இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவா்களை பாஜக அரசு வஞ்சிக்கிா?’ என்று கேள்வி எழுப்பினாா்.