செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ரேபரேலியில் ராகுல் காந்தி!

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது ரேபரேலி தொகுதிக்குச் சென்றுள்ளது பற்றி...

News image

ரேபரேலியில் ராகுல் காந்தி - X

Updated On :10 செப்டம்பர் 2025, 12:08 pm IST

காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக இன்று(புதன்கிழமை) ரேபரேலிக்குச் சென்றுள்ளார்.

ராகுல் காந்தி தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேலிக்கு அவ்வப்போது பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இரு நாள் பயணமாக ராகுல் காந்தி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலிக்கு இன்று காலை சென்றார். லக்னெள விமான நிலையத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

ரேபரேலியில் அவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவிருக்கிறார். முதலில் ஹர்சந்த்பூர், உன்சாஹர் சட்டமன்றத் தொகுதிகளின் பூத் கமிட்டி குழுவுடன் அவர் சந்திப்பு மேற்கொள்கிறார். அதன்பின்னர் சதார் சட்டமன்றத் தொகுதியில் அசோகத் தூணை திறந்து வைக்கிறார்.

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்திலும் பங்கேற்கிறார்.

2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு 7 ஆவது முறையாக ராகுல் ரேபரேலி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Rahul Gandhi on 2 days visit Raebareli Constituency

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.