உத்தரப் பிரதேசத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பு வாகனங்களை மறித்து அந்த மாநில அமைச்சர் தினேஷ் பிரதாப் போராட்டம் நடத்தினார்.
காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக இன்று காலை ரேபரேலி தொகுதிக்கு சென்றார்.
இந்த நிலையில், ராகுல் காந்தி பயணித்த கத்வாரா தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து அவரின் வருகைக்கு எதிர்ப்பு உ.பி. அமைச்சர் தினேஷ் பிரதாப் தலைமையில் பாஜக தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது அவ்வழியாக வந்த ராகுல் காந்தியின் பாதுகாப்பு வாகனங்களை மறித்த பாஜகவினர், அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
காரில் இருந்து இறங்கிய ராகுல் காந்தி, வாக்குத் திருட்டுக் குற்றச்சாட்டில் திணறுவதால் இப்படி செய்கிறார்கள் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாற்றுப்பாதையில் ராகுல் காந்தியை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
இதுதொடர்பாக பேசிய அமைச்சர் தினேஷ் பிரதாப், “ராகுல் காந்திக்கும் தாய் உள்ளார். அவர் பிறரின் தாயை அவதூறாக பேச அனுமதித்திருக்க கூடாது. பிரதமரின் தாய் குறித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். பேசியவரை கட்சியைவிட்டு நீக்கி, வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், ராகுல் காந்தி அவர்களை ஊக்குவிப்பதாக தெரிகிறது. அதற்கு எதிராகதான் இன்று போராட்டம் நடத்தினோம்” என்றார்.
பிகாரில் வாக்குரிமைப் பேரணியில் ராகுல் காந்தி ஈடுபட்டிருந்த போது, தர்பங்காவில் அவர் பேசுவதற்காக போடப்பட்டிருந்த மேடையில் ஏறிய இளைஞர் ஒருவர் மோடியின் தாய் குறித்து அவதூறு கருத்து தெரிவித்தது அதிர்வலையை ஏற்படுத்தியது.
மேடையில் இளைஞர் அவதூறு கருத்து தெரிவித்த சமயத்தில், அந்த இடத்தில் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
In Uttar Pradesh, state minister Dinesh Pratap staged a protest by blocking the security vehicles of Lok Sabha Opposition Leader Rahul Gandhi.
இதையும் படிக்க : ரேபரேலியில் ராகுல் காந்தி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராகுல் காந்தியின் ஒரே திட்டம் அராஜகம்தான்: பாஜக

தில்லியில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்! ராகுல் காந்தியின் பேரணி தடுத்து நிறுத்தம்!

ராகுல் காந்தி கைதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் போராட்டம்: 86 போ் கைது

வயநாடு நிலச்சரிவு: நேரில் வராத ராகுல், பிரியங்கா! பாஜக கடும் விமா்சனம்!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


