தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிப்புஇந்திய பொருள்கள் மீது 100% வரி: மசோதாவில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்!யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்

ஜனநாயக சீர்திருத்த அமைப்பு நிறுவனர் ஜகதீப் சோக்கர் காலமானார்!

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு நிறுவனர் ஜகதீப் சோக்கர் இன்று காலமானார்

ஜகதீப் சோக்கர் - IIM-A

Published On :

புது தில்லி: கல்வியாளரும் சமூக சீர்திருத்தவாதியும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பின் இணை நிறுவனருமான ஜகதீப் எஸ் சோக்கர் இன்று காலமானார். அவருக்கு வயது 81.

இவர் அண்மையில் கீழே விழுந்து தோள்பட்டையில் எலும்பு முறிவுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென நுரையீரலில் தொற்று பாதிப்பும் ஏற்பட்டதாகவும், அதிகாலை 3.30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்ததாகவும் குடும்பத்தினர் கூறியதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

நாட்டில் நடக்கும் தேர்தல்களில் முறைகேடுகளைத் தடுத்து, சீர்திருத்தும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்த ஜகதீப் எஸ் சோக்கர் புது தில்லியில் இன்று மாரடைப்பால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஐஎம் - அகமதாபாத் முன்னாள் பேராசிரியரும் பொறுப்பு இயக்குநராக இருந்தவருமான ஜகதீப் சோக்கர், தன்னுடைய கடந்த 25 ஆண்டு காலத்தை, நாட்டில் சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல் நடைபெற வேண்டும் என்பதற்காக பாடுபட்டவர்.

இந்திய அரசியல், வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வந்த ஜகதீப் சோக்கர், தன்னுடைய போராட்டத்தை சட்டப்பூர்வமாக்கும் வகையில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பை நிறுவியவர்களில் இவரும் ஒருவர்.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு தலைமை தாங்கிய சட்டப் போராட்டத்தின் விளைவாக, உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரங்களை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவித்தது. உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் முன்னணி மனுதாரர்களில் ஜகதீப் சோக்கரும் ஒருவர்.

இந்திய ரயில்வேயில், மெக்கானிக்கல் பொறியாளராக தனது வாழ்வைத் தொடங்கினார் ஜகதீப் சோக்கர். பிறகு படிப்படியாக உயர்ந்து இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் - அகமதாபாத் பேராசிரியராகவும், பிறகு டீன், பொறுப்பு இயக்குநர் பதவிகளை அடைந்தார்.

பணி ஓய்வுக்குப் பிறகு, இவர் முழுக்க முழுக்க தேர்தல் சீர்திருத்தத்துக்காகவே பாடுபட்டார்.

Summary

Jagdeep S. Chokar, an educationist, social reformer and co-founder of the Organization for Democratic Reforms, passed away today. He was 81.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.