36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

சார்லி கிர்க் கொலையாளி தப்பியது எப்படி? புதிய விடியோ வெளியானது!

சார்லி கிர்க் கொலையாளியின் புதிய விடியோ வெளியிடப்பட்டுள்ளது.

News image

விடியோ

Updated On :12 செப்டம்பர் 2025, 11:50 am IST

உடா மக்கள் பாதுகாப்புத் துறை மற்றும் அமெரிக்க காவல்துறை இணைந்து வெளியிட்ட விடியோவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் கொலையாளி, கட்டடத்திலிருந்து குதித்து தப்பிடியோடும் காட்சிகள் பதிவாகியிருக்கிறது.

உடா பல்கலையில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளரான சார்லி கிர்க் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

பல்கலைக்கழகத்தின் ஒதுக்குப்புறமான பகுதியிலிருந்து துப்பாக்கித் தோட்டாக்களையும் கொலைக்குப் பயன்படுத்திய மிக நவீன துப்பாக்கியையும் காவல்துறையினர் கைப்பற்றியிருக்கிறார்கள். கட்டடத்தின் மேல்கூரையிலிருந்த, குற்றவாளி துப்பாக்கிச் சூட்டை நடத்தியதற்கான தடயங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. அங்கு கை மற்றும் ஷூவின் தடங்களும் கிடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

உடா மக்கள் பாதுகாப்புத் துறை ஆணையர் கூறுகையில், உடா மாகாண பல்கலைக்கழகத்தின் மாடி வழியாக ஓடி வந்த கொலையாளி, அங்கிருந்து வெளியே குதித்து ஓடும் காட்சிகள் பதிவாகியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க கொடி மற்றும் கழுகின் புகைப்படங்கள் அடங்கிய ஆடையை அணிந்திருந்ததாகவும், அவரது அடையாளம் இன்னும் தெரியவரவில்லை என்றும், அடர்ந்த மரங்கள் இருந்த பகுதி வழியாகத் தப்பிச் சென்றதகாவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.