மதுராவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலையை கண்டறிந்து ஒருவரை தில்லி போலீஸார் கைது செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள யமுனை நதிக்கு அருகே செயல்பட்டு வந்த சட்டவிரோத ஆயுத தொழிற்சாலையை தில்லி போலீஸார் சனிக்கிழமை கண்டுபிடித்தனர்.
யமுனை நதிக்கு அருகில் 3 முதல் 8 அடி ஆழம் வரை தண்ணீர் தேங்கிய வயல்களைக் கடந்து சென்று இந்த தொழிற்சாலையை அவர்கள் கண்டறிந்துள்னர்.
சம்பவ இடத்தை அடைய குழுவிற்கு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மதுராவைச் சேர்ந்த ஷிவ் சரண் (60) கைது செய்யப்பட்டார்.
அவர், தண்ணீர் தேங்கிய வயல்களைப் பயன்படுத்தி தப்பிக்க முயன்றபோது கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் அங்கிருந்து ஆயுதங்களும் மீட்கப்பட்டன.
விசாரணையில், சில நாட்களுக்கு முன்பு அலிகாரில் இதேபோன்று சோதனையில் கைது செய்யப்பட்ட தனது கூட்டாளி ஹன்வீருக்கு உதவியதாக சரண் தெரிவித்தார்.
அலிகாரிலும் சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் மூலப்பொருட்களின் குவியல் அண்மையில் மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
The Delhi Police has busted an illegal arms factory near the Yamuna river in Uttar Pradesh's Mathura by crossing nearly three kilometres of waterlogged fields where the depth of water ranged from 3 to 8 feet, an official said on Saturday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாததற்கான காரணம் இதுதான்: தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளர்

பக்ரீத் பண்டிகை: சட்டவிரோத இறைச்சி வெட்டுதலுக்கு எதிராக தில்லி அரசு தீவிர கண்காணிப்பு

தில்லியில் சட்டவிரோத ஆயுதக் கும்பல் முறியடிப்பு: கல்லூரி மாணவா் கைது

மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



