6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

யானையைக் காணோம்! ஜார்க்கண்டில் புகார்

யானை திருடு போய்விட்டதாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ளார்.

News image
யானை. - கோப்புப்படம்.
Updated On :13 செப்டம்பர் 2025, 1:23 pm

இணையதளச் செய்திப் பிரிவு

யானை திருடு போய்விட்டதாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் மிர்சாபூரைச் சேர்ந்த நரேந்திர குமார் சுக்லா என்ற நபர் ஜார்க்கண்டின் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்தார். அதில், ராஞ்சியில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் மிர்சாபூருக்குச் சென்று கொண்டிருந்த பெண் யானை, பலாமுவில் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி லால்ஜி கூறுகையில், யானையும் யானை பாகனும் பலாமுவின் ஜோர்கட் பகுதியில் இருந்து காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும் யானை குறித்து எந்த தடயமும் கிடைக்காததால், புகார் அளித்து யானையின் உரிம எண்ணை அவர் சமர்ப்பித்தார். இவ்வாறு குறிப்பிட்டார்.

மேதினிநகர் வன அதிகாரி சத்யம் குமார் தெரிவிக்கையில், பலாமுவில் தீவனப் பற்றாக்குறை ஏற்பட்ட பிறகு, உரிமையாளர் யானையை ராஞ்சிக்கு அழைத்து வந்தார். பின்னர் அவர் அதை பலாமுவில் உள்ள ஒரு யானைப் பாகனிடம் ஒப்படைத்தார். அதன் பிறகு அந்த யானையுடன் யானைப் பாகன் காணாமல் போனார்.

மேலும் விவரங்களைப் பெற சதார் காவல் நிலையத்திற்கு வனத்துறை அதிகாரி அனுப்பப்பட்டுள்ளார் என்றார்.

summary

A man from Uttar Pradesh has filed a police complaint of elephant theft in Jharkhand's Palamu district, officials said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.