5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

இந்தியா மீது கூடுதல் வரி! ஜி7 நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம்!

இந்தியா மீது கூடுதல் வரி விதிக்குமாறு ஜி7 நாடுகளிடம் அமெரிக்கா கோரிக்கை

News image
Updated On :13 செப்டம்பர் 2025, 5:02 pm IST

இந்தியா மீது கூடுதல் வரி விதிக்குமாறு ஜி7 நாடுகளிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

ரஷியாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகள் மீதும் கூடுதல் வரி விதிக்குமாறு ஜி7 நாடுகளுக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலை நிறுத்த பல்வேறு நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அவற்றையெல்லாம் ரஷியா கண்டுகொள்வதேயில்லை.

இதனைத் தொடர்ந்து, ரஷியாவிடம் பெருமளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனா மீது கூடுதல் வரியை அமெரிக்கா விதித்தது. ரஷியாவின் பொருளாதாரத்தில் எண்ணெய் வர்த்தகம் முக்கிய பங்கு வகிப்பதால், அதன் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்தார்.

இருப்பினும், ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தாததால், இந்தியா மீது கூடுதல் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடமும் டிரம்ப் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், இந்தியா மீது கூடுதல் வரியை விதிக்குமாறு ஜி7 அமைப்பான கனடா, இத்தாலி, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளையும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இந்தியா, சீனா மீது 50 முதல் 100 சதவிகிதம் வரையில் வரி விதிக்க அமெரிக்கா வலியுறுத்திய நிலையில், இதுகுறித்து ஜி7 அமைப்பு விவாதிக்கவுள்ளது.

Summary

US urges G7 to impose up to 100% tariffs on China and India over Russian oil

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.