8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! 19 வயது இளைஞர் கைது!

உத்தரப் பிரதேசத்தில் பள்ளி மாணவிக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து...
arrest
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் 2 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை 19 வயது இளைஞர் பாலியல்ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 8 வயது என்பதால், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் அலிகரின் புறநகரில் 2-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு (8 வயது) அந்தப் பள்ளியின் காவலாளியின் மகன் கோலு (19 வயது) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

கோலுவைக் கைதுசெய்த காவல் ஆய்வாளர் கமலேஷ் குமார் கூறியதாவது:

இரண்டாம் வகுப்பு படிக்கும் இந்தச் சிறுமியை வெள்ளிக்கிழமை கோலு என்பவர் அறையில் பூட்டி பாலியல் தொல்லை அளித்திருக்கிறார். இருப்பினும் அந்தச் சிறுமி அங்கிருந்து கூச்சலிட்டு, தப்பிச் சென்றிருக்கிறார்.

பின்னர், கோலுவை பிஎன்எஸ், போக்ஸோ விதிகளின்படி கைது செய்தோம் என்றார்.

Summary

A 19-year-old youth allegedly molested an eight-year-old girl at a school on the outskirts of Uttar Pradesh's Aligarh, police said on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com