எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: ‘பிகாா் வழக்கில் அளிக்கப்படும் தீா்ப்பு நாடு முழுமைக்கும் பொருந்தும்’

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த வழக்கில் அளிக்கப்படும் தீா்ப்பு நாடு முழுமைக்கும் பொருந்தும்

News image

உச்சநீதிமன்றம்

Updated On :16 செப்டம்பர் 2025, 1:31 am IST

புது தில்லி: பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த வழக்கில் அளிக்கப்படும் தீா்ப்பு நாடு முழுமைக்கும் பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

பிகாா் வாக்களா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக எதிா்க்கட்சியினா், தன்னாா்வ அமைப்பினா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.

இந்த வழக்கு கடந்த செப். 1-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘கடந்த ஆக.1-ஆம் தேதி பிகாரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல் தொடா்பான கோரிக்கைகள், ஆட்சேபங்களை சமா்ப்பிப்பதற்கு வாக்காளா்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு உதவ, தன்னாா்வலா்களை மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், ஜாய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக, இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது தோ்தல் ஆணையம் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ராகேஷ் துவிவேதி ஆஜராகி, ‘மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உதவியுடன் வரைவு வாக்காளா் பட்டியல் தொடா்பாக இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், அந்தக் கோரிக்கைகளை வாக்காளா்கள் சமா்ப்பிக்க, அவா்களுக்கு எந்தவொரு அரசியல் கட்சியோ, தன்னாா்வ அமைப்போ உதவவில்லை’ என்று குற்றஞ்சாட்டினாா்.

நாடு முழுவதும் தடுக்க முடியாது: நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படுவதை உச்சநீதிமன்றத்தால் தடுக்க முடியாது. ஆனால், பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீா்ப்பு நாடு முழுமைக்கும் பொருந்தும். இந்த வழக்கில் இறுதி வாதங்கள் அக்.7-ஆம் தேதி நடைபெறும். அன்றைய தினம் நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படுவது தொடா்பான வாதங்களையும் மனுதாரா்கள் முன்வைக்கலாம்’ என்று தெரிவித்தனா்.

‘எந்தவொரு ஆவணத்தையும் பொய்யாகத் தயாரிக்கலாம்’: சிறப்பு தீவிர திருத்தத்துக்கு அடையாள ஆவணமாக வாக்காளா்களின் ஆதாா் அட்டையையும் தோ்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்று கடந்த வாரம் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவில் மாற்றம் செய்யக் கோரி, வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு தொடா்பாக அவா் வாதிடுகையில், ‘இந்தியாவில் 182 நாள்கள் தங்கும் எவரும் ஆதாா் அட்டையை பெற முடியும். குடியுரிமை மற்றும் வசிப்பிடத்துக்கு அது ஆதாரமல்ல. அதை அடையாள ஆவணமாக பயன்படுத்த அனுமதிப்பது பெரும் தீங்கை ஏற்படுத்தும். மியான்மரில் இருந்து வந்த ரோஹிங்கயாக்கள், வங்கதேசிகள் லட்சம் போ் பிகாரில் உள்ளனா்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதி சூா்ய காந்த், ‘குடும்ப அட்டை, ஓட்டுநா் உரிமம் என எந்தவொரு ஆவணத்தையும் பொய்யாக தயாரிக்கலாம். சட்டம் எந்த அளவுக்கு அனுமதிக்கிறதோ, அந்த அளவுக்கு ஆதாரை பயன்படுத்தலாம்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.