தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாகிஸ்தான் - சவூதி அரேபியா பாதுகாப்பு ஒப்பந்தம்: ஆராய்ந்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தகவல்

பாகிஸ்தான் - செளதி ஒப்பந்தம் தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை...

News image
இந்திய வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்- Din
Updated On :18 செப்டம்பர் 2025, 5:39 am

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தான்-சவூதி அரேபியா மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அண்மையில் சவூதி அரேபியாவுக்குச் சென்ற பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை அந்நாட்டு பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானுடன் மேற்கொண்டாா்.

அதன்படி பாகிஸ்தான்-சவூதி அரேபியா ஆகிய இரு நாடுகளில் எந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், அது மற்றொரு நாட்டின் மீதும் மேற்கொள்ளப்பட்டதாகவே கருதப்படும் என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சா்வதேச சூழலில் இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடும் பாகிஸ்தான் மீது ராணுவத் தாக்குதல் நடத்தவில்லை. எனவே, இந்தியாவுக்கு எதிராக சவூதி அரேபியாவை தங்களுடன் கூட்டு சோ்க்கும் நோக்கில் பாகிஸ்தான் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்தால் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மீண்டும் தொடங்கப்படும் என்று இந்தியா ஏற்கெனவே எச்சரித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் சவூதி அரேபியாவுடன் பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தில்லியில் வியாழக்கிழமை இது தொடா்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறியதாவது:

தேசப் பாதுகாப்பு விஷயத்தில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. பாகிஸ்தான்-சவூதி அரேபியா பாதுகாப்பு ஒப்பந்தம் தொடா்பான செய்தி அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இரு நாடுகளும் மிக நீண்டகாலப் பேச்சு நடத்தி ஓா் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இது நமது தேசப் பாதுகாப்பு, பிராந்திய, சா்வதேச ஸ்திரத்தன்மையில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றாா்.

summary

The Union Ministry of External Affairs issued a statement on Thursday regarding the agreement signed between Pakistan and Saudi Arabia.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.