பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பிரதமர் மோடியின் தீபாவளி பரிசு: யோகி ஆதித்யநாத்

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பிரதமர் மோடியின் தீபாவளி பரிசு என யோகி ஆதித்யநாத் வரவேற்பு..

News image

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் - (கோப்புப் படம்)

Updated On :18 செப்டம்பர் 2025, 2:00 pm IST

மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை வரவேற்ற உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நாட்டிற்கு பிரதமர் மோடியின் தீபாவளி பரிசு என்று கூறியுள்ளார்.

செய்தியாளர்களின் சந்திப்பில் உரையாற்றிய முதல்வர் ஆதித்யநாத்,

ஜிஏஸ்டி கவுன்சில் வரிச் சலுகைகள் மற்றும் சீர்திருத்தங்கள் செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்துள்ளது. இது மக்களுக்குப் பிரதமர் மோடியின் தீபாவளி பரிசு என்று அவர் கூறினார்.

ஜூலை 2017இல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, வரி விகிதங்கள் மற்றும் செஸ் மிக அதிகமாக இருந்ததாலும், ஒருங்கிணைந்த வரிவிதிப்பு முறை இல்லாததாலும் நேர்மையாக வரி செலுத்துவோரும் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.

ஜிஎஸ்டி வரிகளை ஒரு நாடு, ஒரு வரி என்ற கொள்கையின் கீழ் ஒருங்கிணைத்தது. இது ஜிஎஸ்டி பதிவுகளில் குறிப்பிடத்தக்க உயர்வுக்கும், பொருளாதாரத்திற்கான நேரடி நன்மைகளுக்கும் வழிவகுத்தது.

புதிய ஜிஎஸ்டி இரண்டு முக்கிய வரி அடுக்குகளுடன் கட்டமைப்பை எளிமைப்படுத்தியுள்ளன. 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் இவை அனைத்து துறைகளிலும் உள்ள சாமானியர்களுக்கும் விவசாயிகளுக்கும் மக்களுக்கும் பயனளிக்கும்.

இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பொருளாதாரத்திற்கு ரூ. 2 லட்சம் கோடி முதலீட்டை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினசரி வீட்டு உபயோகப் பொருள்களுக்கான ஜிஎஸ்டி இப்போது பூஜ்ஜிய சதவீதமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

விவசாய உபகரணங்களுக்கான ஜிஎஸ்டி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது செலவுகளைக் குறைக்கவும், விவசாயப் பொருளாதாரத்தை உயர்த்தவும் உதவும். மேலும் எழுதுபொருள்கள், குறிப்பேடுகள் இப்போது மலிவாக இருப்பதால் மாணவர்கள் பயனடைவார்கள், சுகாதார காப்பீடும் கணிசமாகக் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Summary

Uttar Pradesh Chief Minister Yogi Adityanath on Thursday welcomed the recently announced GST reforms by the Centre, describing them as Prime Minister Narendra Modi's "Diwali gift" to the country.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.