/

ஹேக் செய்யப்பட்ட ஏக்நாத் ஷிண்டேவின் எக்ஸ் தளப் பக்கம்!

மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் 'எக்ஸ்' தளப் பக்கம் இன்று ஹேக் செய்யப்பட்டது.

News image
ஏக்நாத் ஷிண்டே- ANI
Updated On :21 செப்டம்பர் 2025, 6:08 am

இணையதளச் செய்திப் பிரிவு

மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் 'எக்ஸ்' தளப் பக்கம் இன்று ஹேக் செய்யப்பட்டது.

ஹேக் செய்த பிறகு ஹேக்கர்கள் அதில் பாகிஸ்தான் மற்றும் துருக்கி கொடிகளின் படங்களை பதிவிட்டுள்ளனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆசிய கோப்பை தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் களம்காணும் நிலையில் இரண்டு இஸ்லாமிய நாடுகளின் புகைப்படங்கள் அடங்கிய காட்சிகளை ஹேக்கர்கள் நேரலையில் ஒளிபரப்பியுள்ளனர்.

நாங்கள் உடனடியாக சைபர் கிரைம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தோம். துணை முதல்வரின் எக்ஸ் கணக்கைக் கவனித்துக்கொள்ளும் எங்கள் குழு பின்னர் கணக்கை மீட்டெடுத்தது என்று அந்த அதிகாரி கூறினார்.

ஹேக் செய்யப்பட்ட 'எக்ஸ்' தளப் பக்கத்தை மீட்டெடுக்க 30 முதல் 45 நிமிடங்கள் ஆனது என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

summary

Maharashtra Deputy Chief Minister Eknath Shinde's 'X' handle was found to be hacked on Sunday, with hackers posting images of flags of Pakistan and Turkey, an official said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.