சத்தீஸ்கரில் கபடி போட்டியின்போது மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், கொண்டகான் மாவட்டத்தில் உள்ள ரவாஸ்வாஹி கிராமத்தில் சனிக்கிழமை இரவு கபடி போட்டி நடைபெற்றது. அப்போது பார்வையாளர்களுக்காக அமைக்கப்பட்ட கூடாரம் உயர் அழுத்த மின் கம்பியின் மீது உரசியுள்ளது.
இதில் மின்சாரம் பாய்ந்து மூன்று பேர் பலியாகினர். மேலும் பலர் தீக்காயங்களுக்கு ஆளானதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
உள்ளூர் கிராமவாசிகள் பாதிக்கப்பட்ட ஆறு பேரை விஷ்ராம்புரியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 3 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது.
காயமடைந்த மூன்று பேரில் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதால், மேம்பட்ட மருத்துவ மையத்திற்கு மாற்றப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார். பலியானவர்கள் சதீஷ் நேதாம், ஷியாம்லால் நேதாம் மற்றும் சுனில் ஷோரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
Summary
A storm caused an 11-kV power line to touch the iron pole of the tent erected on the ground for viewers to watch the game, resulting in several of them receiving an electric shock.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி பலி

மின்மாற்றியில் ஏறிய தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

நுங்கு பறிக்கும் போது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழப்பு

சத்தீஸ்கரில் தனியார் விமானம் விபத்து!
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


