
நாகையில் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக தவெகவினர் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகையில் தவெக தலைவர் விஜய் சனிக்கிழமையில் பிரசாரம் மேற்கொண்ட நிலையில், பிரசாரத்தின்போது பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக அக்கட்சி நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் புத்தூர் அண்ணா சிலை அருகே விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது, வேளாங்கண்ணி பேராலயத்துக்குச் சொந்தமான ஆரோக்கிய மாதா திருமண மண்டபத்தின் சுற்றுச் சுவரில் தவெக தொண்டர்கள் ஏறினர். தொண்டர்கள் ஏறியதில் மண்டபத்தின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாகக் கூறி, 4 பிரிவுகளின்கீழ் தவெக நிர்வாகிகள் 5 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
பிரசாரத்தின்போது, பொதுச் சொத்துக்கோ பொதுமக்களுக்கோ இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்று காவல்துறை முன்னரே அறிவுறுத்தியிருந்தது.
இதையும் படிக்க: விஜய் பரீட்சை எழுதட்டும்; திமுகவுக்கு மாற்று அதிமுகதான்: ஆர்.பி.உதயகுமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.