மகாராஷ்டிரத்தில் 6 நக்சல்கள் சரண்!
மகாராஷ்டிரத்தில், கூட்டாக ரூ.62 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 6 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.
கட்சிரோலி மாவட்டத்தில், கூட்டாக ரூ.62 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த 6 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் இன்று (செப். 24) சரணடைந்துள்ளனர்.
இந்த நிலையில், மாவோயிஸ்டுகளின் மூத்த தலைவராக அறியப்படும், பீமண்ணா (எ) சுக்லால் முட்டய்யா குல்மெதே (வயது 58) மற்றும் அவரது மனைவி விமலக்கா சாத்மேக் (56) ஆகியோரும் சரணடைந்துள்ளனர். இவர்கள், இருவரையும் பிடிக்க காவல் துறையினர் தலா ரூ.16 லட்சம் வெகுமதி அறிவித்திருந்தனர்.
முன்னதாக, கட்சிரோலி மாவட்டத்தில் மட்டும் 716 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.
சத்தீஸ்கரில், இன்று மட்டும் கூட்டாக ரூ.64 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 30 பேர் உள்பட 71 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சிபிஎஸ்இ 10, +2 பொதுத் தேர்வுகள் எப்போது தொடங்கும்?
In Maharashtra, 6 Naxals, who were wanted with a combined reward of Rs 62 lakh, have surrendered to security forces.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

