மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சத்தீஸ்கரில் 71 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கரில் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 30 பேர் உள்பட 71 நக்சல்கள் சரணடைந்துள்ளது குறித்து...

News image
சத்தீஸ்கரில் 71 நக்சல்கள் சரணடைந்துள்ளனர்
Updated On :24 செப்டம்பர் 2025, 10:16 am

இணையதளச் செய்திப் பிரிவு

சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில், கூட்டாக ரூ.64 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 30 பேர் உள்பட 71 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநில அரசின் நக்சல்களுக்கான மறுவாழ்வு திட்டங்களின் கீழ், தண்டேவாடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இன்று (செப். 24) தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கங்களில் செயல்பட்டு வந்த 21 பெண்கள் உள்பட 71 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

இந்த நிலையில், சத்தீஸ்கர் காவல் துறையினர் கூட்டாக ரூ.64 லட்சம் வெகுமதி அறிவித்து தேடி வந்த 30 நக்சல்களும், இந்தக் குழுவுடன் இணைந்து சரணடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில், அதிகப்படியாக 2011 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்புப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டு, ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பாமன் மத்காம் என்பவர் சரணடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சரணடைந்துள்ள நக்சல்களுக்கு மாநில அரசின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு, அவர்களுக்கு திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வரும் 2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்திற்குள் நாட்டில் உள்ள நக்சல்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

In Chhattisgarh's Dantewada district, 71 Naxals, including 30 wanted with a collective reward of Rs 64 lakh, have surrendered to security forces.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.