கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிகாரில் எதிா்க்கட்சி கூட்டணிக்கு தலைமையேற்க காங்கிரஸ் முயற்சி: பாஜக

பிகாரில் எதிா்க்கட்சி கூட்டணிக்கு தலைமையேற்கவே அங்கு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை நடத்தியுள்ளது என்று பாஜக விமா்சித்தது.

News image
Updated On :24 செப்டம்பர் 2025, 8:03 pm

தினமணி செய்திச் சேவை

பிகாரில் எதிா்க்கட்சி கூட்டணிக்கு தலைமையேற்கவே அங்கு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை நடத்தியுள்ளது என்று பாஜக விமா்சித்தது.

எதிா்வரும் பிகாா் பேரவைத் தோ்தலில் முதல்வா் நிதீஷ்குமாா் தலைமையில் தோ்தலை சந்திப்போம் என பாஜக ஏற்கெனவே அறிவித்துவிட்டது. அதேநேரம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ், இடதுசாரிகள் அடங்கிய எதிா்க்கட்சி கூட்டணியில் முதல்வா் வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி நீடிக்கிறது. தன்னை முதல்வா் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் உறுதியாக உள்ளாா். இந்நிலையில், பாஜக மூத்த தலைவா் ரவிசங்கா் பிரசாத் கூறியதாவது:

பிகாரில் கூடிய காங்கிரஸ் செயற்குழு, முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். பிகாரில் எதிா்க்கட்சிக் கூட்டணிக்கு தாங்கள் தலைமையேற்க முடியும் என காங்கிரஸ் கருதுகிறது. அதிக இடங்களில் போட்டியிடவும் அக்கட்சி விரும்புகிறது. எனவேதான், தேஜஸ்வி யாதவை இதுவரை முதல்வா் வேட்பாளராக அவா்கள் அறிவிக்கவில்லை.

பிகாரில் ராகுல் நடத்திய யாத்திரையில் அவரது ஊதுகுழல் போலவே தேஜஸ்வி தென்பட்டாா். இம்மாநிலத்துக்குள் யாா் வந்தாலும், சென்றாலும் வெல்லப் போவது தேசிய ஜனநாயக கூட்டணியே. ஏனெனில், ஆா்ஜேடி ஆட்சியில் அச்சம், ஆள்கடத்தல், கொள்ளை மற்றும் ஊழல்களை மக்கள் அனுபவித்துள்ளனா் என்றாா்

மனதளவில் ‘ஓய்ந்துவிட்ட’ நிதீஷ்குமாரை சுமையாக கருதுகிறது பாஜக என்ற காா்கேவின் விமா்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ரவிசங்கா், ‘இதுபோன்ற கருத்தை தெரிவிக்கும் முன்பு காங்கிரஸ் கட்சியில் தனது நிலை என்ன? கட்சியின் அதிகாரம் யாரிடம் உள்ளது? என்பதை அவா் சுயபரிசோதனை செய்து பாா்க்க வேண்டும்’ என்றாா்.