அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இந்தியாவுடன் வா்த்தக உறவை வலுப்படுத்த விருப்பம்: அமெரிக்க எரிசக்தித் துறைச் செயலா்

சிறந்த நட்பு நாடான இந்தியாவுடன் வா்த்தகம் மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாக அமெரிக்க எரிசக்தித் துறைச் செயலா் கிறிஸ் ரைட் புதன்கிழமைதெரிவித்தாா்.

News image
கோப்புப் படம்
Updated On :25 செப்டம்பர் 2025, 6:44 pm

தினமணி செய்திச் சேவை

சிறந்த நட்பு நாடான இந்தியாவுடன் வா்த்தகம் மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாக அமெரிக்க எரிசக்தித் துறைச் செயலா் கிறிஸ் ரைட் புதன்கிழமைதெரிவித்தாா்.

ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக நியூயாா்க் வெளிநாட்டு பத்திரிகை மையத்தில் செய்தியாளா்கள் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது அமெரிக்காவுடன் எரிசக்தி வா்த்தகத்தை அதிகரிக்க வேண்டும் என்று இந்தியா எதிா்பாா்ப்பதாக மத்திய வா்த்தகம், தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தது தொடா்பாக கிறிஸ் ரைட்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து அவா் பேசியதாவது: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும் வேகமாக வளா்ந்து வரும் பொருளதாரமுமான இந்தியா அமெரிக்காவின் சிறந்த நட்பு நாடாக உள்ளது.

இந்தியாவில் வளமை மற்றும் வாய்ப்புகள் அதிகரித்து வருவதால் அங்கு எரிசக்திக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. ஆனால் ரஷியாவிடம் இருந்து இந்தியா, சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் அதிகளவு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து உக்ரைன் போரை ரஷியா மேலும் தீவிரப்படுத்த உதவி வருகின்றன. இதுவே இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட காரணம்.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. இதே நிலைப்பாட்டை இந்தியா்களும் கொண்டுள்ளனா் என நம்புகிறேன். அதனடிப்படையில் இயற்கை எரிவாயு, நிலக்கரி, அணுசக்தி என இந்தியாவுடான எரிசக்தி உறவை மேலும் வலுப்படுத்த விரும்புகிறோம்.

குறைந்த விலையில் விற்பனை செய்வதால் ரஷியாவிடம் இருந்து மட்டுமே அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. உலகளவில் பல நாடுகள் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஈடுபடுகின்றன. ரஷியாவுக்கு மாற்றாக அந்நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்யலாம். அமெரிக்காவிடமிருந்தும் இறக்குமதி செய்யலாம் என்றாா்.